நம் வாழ்வில் அன்றாடம் கடந்து போகிற, எதிர்படுகிற சம்பவங்களின் அடிப்படையில் சமூகம், காதல், நட்பு, அது இதுவென சில கவிதைத் தெளிப்புகளை உங்கள் விழிகளின் பார்வைக்கும் மனங்களின் நேசத்திற்கும் படைத்திருக்கிறேன். இதில் பல கவிதைகள் உங்களின் இதயத்திற்கு நெருக்கமாகவும், பல கவிதைகள் உங்களுக்கு நெருடலையும் தர வாய்ப்பிருக்கிறது. நல்லதெனப் படுவதையும், தள்ளெனக் கொள்வதையும் உங்கள் தீர்ப்பிற்கே விட்டுவிடுகிறேன். நீதி தேவதையின் கரங்களில் இருக்கிற தரசினை போலிருக்கட்டும் உங்கள் விமர்சனங்கள்.