ஆகோள் பூசல், பெருங்கற்கால நாகரிகம், களவு,பாணர் மரபு என்ற நான்கு கருத்து வகைகளும் சங்க இலக்கியத்திலும் தொன்மை வாய்ந்தவையாகக் கருதப்படுகின்றன. இந்நான்கிற்கு இடையில் எழுதப்படாத வரலாற்றுக் காலத்து நாகரிக எச்சங்கள் உயிர்ச்சுவடுகளாக(fossils) புவவர்மரபில் படிந்துள்ளன. புலவர்மரபிற்கும் புராதனமான பாணர்மரபிற்கும் இடையே நிகழ்ந்துள்ள ஊடுறவுகளை அடையாளம் காண்பதற்கு இந்நூலின் இரு கட்டுரைகளும் உதவுக்கூடும்.இன்றைய தமிழ்ச் சமூகத்தின் ஆழ்மனப் படிமங்களின் மேல்மனச் சிறகடிப்புகளைச் சங்ககாலத் தமிழ்ச் சமூகத்தின் பதிவுகளில் காணலாம். மனிதர்கள் மாறலாம், அழியலாம்.ஆனால் அவர்களுடைய நாகரித் தடங்கள் மறைவதுமில்லை, அழிவதுமில்லை.
ராஜ் கௌதமன் (ஆகஸ்ட் 25, 1950), தமிழ் சங்க இலக்கியங்களின் ஊடாக தமிழ் பண்பாட்டு வளர்ச்சியை ஆய்வு செய்தவர். மார்க்ஸிய, பின்நவீனத்துவ, தலித்திய பார்வை கொண்டவர். பேராசிரியர், நாவலாசிரியர், இலக்கிய விமர்சகர். இலக்கியமும், அழகியலும் எவ்வாறு அதிகார வர்க்கத்தின் கருத்தியலை நிறுவிக்கொள்ள உதவின என்பதை தன் ஆய்வுகள் மூலம் விளக்கியவர்.