மனிதர்களின் மனங்கள் சூழ்நிலைக்கேற்பவே முடிவெடுக்கும். நிலைத்த முடிவென்று எதுவுமில்லை.
மகா பெரும் கோடீஸ்வரனான பாண்டிய நெடுஞ்செழியனுக்குத் தன்னைத் திட்டும் கிராமத்து பைங்கிளியான யாழினியின் மேல் காதல் பித்தாகி தூங்கவிடாமல் தொல்லை செய்கிறது.
கிராமத்து பைங்கிளிக்கு வாழ்வில் ஒரே கவலை அழகு பற்றித் தான், தான் என்ன அவ்வளவு பேரழகியா என்று அடிக்கடி கேட்டு கேட்டு எதிராளியை தன்னைப் புகழவைக்கிறாள்.
காதலால் இவன் உளறல்களும்,தன்னை காதலிக்க வைக்க யாழினிக்கு கொடுக்கும் நெருக்கடிகளும்,திருமணம் முடிவான பின்பு அவளைப் பார்க்க முடியாமல் உருகி தவிக்கும் தவிப்பும் என்று பல நூறு பக்கங்களுக்குச் செல்லும் போது அடுத்த என்ன வரும் என்று நமக்குத் தெரிந்து போகிறது.
திருமணத்தன்று யாழினியின் தோழன் சதீஷ் தன்னை முன்பு அவள் காதலித்தால் என்று சொன்னதைக் கேட்டவன் மணமான நாளில் இருந்து அவளைத் தள்ளி வைத்து வார்த்தையாலும் காயப்படுத்துகிறான்.
சதீஷின் அக்கா திருமணத்தில் தடங்கள் ஏற்படும் போது யாழினி உதவி செய்யப்போகப் குற்றவுணர்வால் அவர்களின் திருமணத்தை நிறுத்த வேறு ஒருவர் சொல்லி தான் யாழினி தன்னைக் காதலித்தால் என்று சொன்னதாக சதீஷ் பாண்டிய நெடுஞ்செழியனிடம் ஒத்துக்கொண்ட பிறகே மனைவியை அந்த உறவுக்குள் வைத்துப் பார்க்கிறான்.
இது எதுவுமே தெரியாத யாழினி கணவன் மீண்டும் காதலானாக மாறியதை கண்டு அவனின் காதலில் கரைந்து போகிறாள்.