அரசியல் ஜாம்பவானை ஒரு சாமான்யன் எதிர்க்க முடியுமா? பகையைத் தீர்க்க முடியுமா? முடியும் என்கிறான் இந்த அனலன். தனது பகையைத் தீர்த்துக்கொள்ள அவனோடு துணை சேர்கிறாள், அவனின் காதல் நாயகி. “அனலன் எனும் நான்...”
சாமானியனால் அரசியலில் மிகப்பெரிய செயலை ஒரே நாளில் நடத்துவது சாத்தியமில்லை என்றாலும் உச்சநிலையைத் தொடப் போகும் காரியத்தைச் செய்ய ஓர் நாளே போதும்.
திரைப்பட நடிகனான அனலன் அவ்வகையிலே சூழ்ச்சியின் மூலம் முதலமைச்சரின் நாற்காலியில் அமர்கிறார்.
தன்னை கேள்விகேட்க முடியாத இடத்தில் அமர்ந்து இருக்கிறோம் என்ற மிதப்பில் முழு அதிகாரத்தையும் மக்களிடம் பிரயோகித்து ஏதோ ஒரு வகையில் அவர்களுக்கு கொடுத்த துன்பத்தின் பலனாக தற்போதைய முதலமைச்சர் அரசியல் விளையாட்டில் பலியாகிறார்.
அனைத்து லாஜிக் மூலக்கூறுவையும் தள்ளிவைத்துவிட்டு படித்தால் சிற்சில சம்பவங்களைக் கொண்ட சுவாரசியமானக் கதை.