ஓய்வுபெற்ற பேராசிரியர் சிவசாமிக்குக் கிடைத்த டீவி சான்ஸ் என்ன ஆனது? புஷ்பாவின் பிள்ளை விமல் நன்றாகப் படிப்பானா? ஸ்ரீதரின் தங்கை கமலஜாவுக்குப் பேச்சு வந்ததா? சுப்ரஜாவின் கோபம் தணிந்ததா? வீராச்சாமிக்குக் கிடைத்த மாயப் பேனாவும் மந்திரமும் எப்படி வேலை செய்தன? மாணிக்கத்தின் கைப்பை கிடைத்து முத்துவின் கல்யாணம் நடந்ததா? கொலையான கோயில் குருக்களின் முகம் ஏன் சிதைக்கப்பட்டது? தெரிந்து கொள்ள விடைதவம் என்ற கிராமத்தின் பெரியகோயில் கோபுரவாசலில் நுழைகிறோம். ஆறு சிறுகதைகளும் ஒரு குறுநாவலும் கொண்ட தொகுப்பு இது. குறுநாவலில் நமக்கு ஏற்கெனவே பழக்கமான சதுரா துப்பறியும் நிலையத்தைச் சேர்ந்த தர்மா, தன்யா, தர்ஷினி பங்குபெறுகிறார்கள்.