‘வழிநடைப் பயணம்’ என்று குறிப்பிட்டிருந்தாலும் பர்மாவிலிருந்து இந்திய எல்லைக்கு உயிர் தப்பித்து வந்த பயணத்தில் அவர் நடந்து வந்த தூரமும் காலமும் ஒரு பகுதி தான். ஆனால் இது ஒரு அவசர கால அகதியின் பயணம். ஒரு போர்க்கால அனுபவத்தின் நேரடிப் பதிவு. தமிழில் இத்தகைய வகைமை சார்ந்த அபுனைவு எழுத்துக்குரிய ஒரே எழுத்தாளராக வெ.சாமிநாத சர்மாவை சொல்லலாம் என்று தோன்றுகிறது. இரண்டாம் உலகப் போரின் போது அந்நிய மண்ணில் வாழ்ந்த இன்னொரு எழுத்தாளர் தமிழின் மிக முக்கியமான நாவலாசிரியர்ரான ப.சிங்காரம். அவரது அனுபவங்கள் நேரடியாகச் சொல்லப்படவில்லை. மாறாக ‘புயலிலே ஒரு தோணி’ என்ற நாவலாக உருவெடுத்தது. யுத்த கால மலேசியாவில் தமிழர்களின் வாழ்க்கையை சித்தரிக்கும் இன்னொரு படை
எனது பர்மா வழிநடை பயணம் வெ.சாமிநாத சர்மா இதுவரை பர்மாவில் நடந்த போர் பிரச்சனைகள் குறித்து பெரிதாக நான் ஒன்றும் அறிந்து வைத்துக்கொள்ளவில்லை. அதே போல பயணம் தொடர்பாக நான் படிக்கும் முதல் புத்தகம் இதுதான். புத்தகத்தின் ஆசிரியர் வெ.சாமிநாத சர்மா அவர்கள் பர்மாவை சேர்ந்தவர். பர்மாவில் ஒரு பத்திரிக்கையில் வேலை பார்த்து வருகிறார். அந்த சமயத்தில் பர்மா பிரிட்டிஷாரின் ஆதிக்கத்தில் உள்ளது. 1942 ஆம் ஆண்டு பிரிட்டிஷ்க்கும் ஜப்பானுக்கும் ஏற்பட்ட பகையால் ரங்கூனில் ஜப்பான் குண்டுகளை போடுகிறது. அதன் பிறகு ஜப்பான் வரிசையாக பர்மாவின் பல இடங்களில் குண்டுகளை போட துவங்குகிறது. இந்நிலையில் சூழ்நிலையை சமாளிக்க முடியாத பிரிட்டிஷ் ராணுவம் பர்மாவை அம்போவென விட்டு விட்டு சென்று விடுகிறது. தொடர்ந்து ஜப்பானின் தாக்குதலுக்கு உள்ளாகும் பர்மா மக்களில் பணக்கார வர்க்கத்தினர். நீராவி கப்பல்கள் மற்றும் ரயில் மூலமாக இந்தியா போன்ற நாடுகளுக்கு சென்று விடுகின்றனர். ஆனால் கப்பலில் செல்ல காசு இல்லாதவர்களும், உடைமைகளை விட்டு விட்டு வேறு நாட்டிற்கு செல்ல தயாராக இல்லாதவர்களும் பர்மாவிலேயே இருக்கின்றனர். அதற்கு இரண்டு முக்கிய பிரச்சனைகள் அவர்களிடம் உள்ளன. ஒன்று தனது வீடு, சொத்து என அனைத்தையும் விட்டு விட்டு வேறு நாட்டிற்கு சென்று எப்படி வாழ்வது. மேலும் அங்கு என்ன தொழில் கிடைக்கும். அவர்கள் தங்களை அகதிகளாகதானே பார்ப்பார்கள். இதனால் பர்மாவை விட்டு செல்ல யோசித்து இருந்தவர்களில் புத்தகத்தின் ஆசிரியரும் ஒருவர். ஆனால் சிறிது நாட்களில் பர்மாவின் அனைத்து போக்குவரத்துகளும் நிறுத்தப்பட்டன. நீராவி கப்பல்களும், ரயில்களும் தடைப்பட்டன. இப்போதுதான் பர்மா மக்கள் தாங்கள் கைவிடப்பட்டதை உணர்கின்றனர். இனி எப்படி அவர்கள் இந்தியா செல்வது என்பது இப்போது மிகப்பெரிய கேள்வியாக உள்ளது? வேறு வழியே இல்லை. ஒரு நெடிய துயரமான பயணம் அவர்களுக்காக காத்திருந்தது. பலர் அதிகப்படியான உடைமைகளை எடுத்துக்கொண்டு நடக்க துவங்கி போக போக அவற்றை தூக்க முடியாமல் ஒவ்வொன்றாக தூக்கி எறிந்து கொண்டே வந்ததாக ஆசிரியர் கூறுகிறார். அவர் போன வழியெங்கும், பாத்திரங்களும் வீட்டு சாமான்களுமே சாலை ஓரமாக கிடந்தனவாம். அந்த பயணத்தில் இறந்தவர்கள் பலர். புத்தகத்தின் ஆசிரியருக்கு அரசாங்க ரீதியான செல்வாக்கு இருந்ததால் அந்த அளவிற்கான மோசமாக அவர் அவதியுறவில்லை. ஆனால் போகும் வழியெங்கும் அவதிப்படும் மக்களை அவர் பார்க்கிறார். பர்மா பயணத்தை அகதிகள் முகாமில் இருந்து அவர்களது பயணம் வரை அனைத்துமே மோசமாக மட்டுமே இருக்கிறது இந்தியாவுக்கு வெகு சமீபத்தில் அவர் அதிகப்பட்சமான பிணங்களை பார்த்ததாக கூறுகிறார். அவர்கள் எல்லாம் இந்தியா வரை வந்தும் உடல் நல கோளாரால் இறந்தவர்கள். ஒரு போர் எந்த அளவுக்கு மோசமானது என்பதை இந்த புத்தகம் மேலும் மெய்பிப்பதாக இருந்தது. ஆனால் பல இடங்களில் கதையின் ஆசிரியர் படிக்கும் என்னோடு ஒத்து போகவில்லை. அவர் ஒரு பிரிவினை வாதியாகதான் எனக்கு தெரிந்தார். இருந்தும் பர்மா பயணம் குறித்த ஒரு அறிமுகத்தை அளித்ததால் இந்த புத்தகத்தில் அந்த விஷயங்களை நான் கண்டுக்கொள்ளவில்லை. பர்மாவில் கிளம்பிய இந்த பயணம் அவர் சென்னை வந்து சேர்வதோடு முடிவடைகிறது. பர்மா பயணம் குறித்தும் போர் குறித்தும் மேலும் அறிந்துக்கொள்ள ஆர்வமாக உள்ளது.