நம் முன்னோர்களில் மகான்கள், மகரிஷிகள், அவதாரங்கள், முனிவர்கள், ஞானிகள் எனப்படுவோர் காம உணர்ச்சியை முற்றிலுமாய் வென்று வாழ்ந்ததாகப் பழம் பனுவல்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆழ்ந்து சிந்தித்தால், பல்வேறு உணர்ச்சிகளுடன் காலமெல்லாம் போராடுவதும், முடிவில் செத்துத் தொலைப்பதும்தான் மனிதகுலத்துக்கான விதி என்பது புரியும். உண்மை இதுவாக இருக்கையில், மேற்கண்டவர்கள், மிக வலிமை வாய்ந்த காம உணர்ச்சியை முற்றிலுமாய் அடக்கி ஆண்டார்கள் என்பது மிகைப்படுத்தும் செயல் என்றே தோன்றுகிறது உணவு உண்ணாமலே ஒருவர் முழு ஆயுளையும் வாழ்ந்து கழிப்பது எப்படிச் சாத்தியம் இல்லையோ, அது போலத்தான் காம இன்பத்தை முற்றிலுமாய் நிராகரித்து வாழ்ந்து முடிப்பதும்.