இந்தியப் பேரறிஞரும் புரட்சியாளருமான வினோபா அவர்கள் கல்வி பற்றிக் கூறுவதாவது, திட்டமிட்டு, கட்டாயத்தின் மீது கற்பிக்கப்படும் கல்விக்கு பதிலாக இயற்கையாக, தன்னிச்சையாக கற்றல் நடைபெற வேண்டும்.
உண்மையான வாழ்க்கை நிலைகளிலிருந்து பிரித்தொதுக்கப்பட்டு வகுப்பறைகளில் கற்பிக்கப்படும் கல்வி தனிநபரின் படைப்பாற்றலையும், புதியன கண்டுபிடிக்கும் திறனையும், தன்னையறியும் ஞானத்தையும் அழித்துவிடுகிறது.
வினோபா அதற்கான மாற்று வழியை, ஆதரக்கல்வி இயக்கத்தை விளக்குகிறார்.
विनायक नरहरी भावे (आचार्य विनोबा भावे नावाने प्रसिद्ध) हे भारतीय स्वातंत्र्यसैनिक व भूदान चळवळीचे प्रणेते होते. महात्मा गांधींनी १९४० मध्ये 'वैयक्तिक सत्याग्रह' पुकारला, त्यावेळीही पहिले सत्याग्रही म्हणून त्यांनी आचार्य विनोबा भावे यांची निवड केली. ब्रिटिश राजविरोधी या आंदोलनाचे पर्यवसान १९४२ मध्ये 'छोडो भारत' आंदोलनात झाले. भावे पुढे सर्वोदयी नेते म्हणून प्रसिद्ध झाले.
வினோபாவின் சிந்தனைகளுக்கும் கருத்துக்களுக்கும் ஒரு நல்ல அறிமுகம் இந்த புத்தகம்.
"அங்குமிங்கும் அலைந்து திருந்து கடினமான சூழல்களிலிருந்து மக்களை விடுவிக்கும் நாடோடி வீரனுடையதாக எனது பணியை நான் கருதவில்லை. மக்கள் தங்களது பிரச்சினைகளைத் தாங்களே தீர்த்துக்கொள்வதற்கான வழியைக் காட்டுவதே எனது தாழ்மையுள்ள வேலையாகும்."
-மாகாத்மா காந்தி
அவ்வாறு கல்விக்கான வழியை கிராமங்கள் தாங்களே தேடவேண்டும், ஒவ்வொரு கிராமத்துக்கும் ஒரு பல்கலைக்கழகம் வேண்டும் அவை அக்கிராமங்களாலே அமைக்கப்படவேண்டும் என்கிறார்.
கல்வி, நிறுவனங்களையம் பாடத்திட்டங்களையும் புத்தகங்களையும் சார்ந்து அல்லாமல் செயல் மற்றும் தொழில்முறையாக இருக்க வேண்டும் என்கிறார் வினோபா.
* கல்வியில் "தற்சார்பு" என்பது எனக்கு ஆச்சர்யமூட்டும் புதிய சிந்தனையாகபடட்து. -நமது கல்வியின் தரம் மாணாக்கர்களை அறிவில் தன்னிறைவு பெற்றவர்களாயும், சுயமாக சிந்திக்கக் கூடியவர்களாயும் உருவாக்குவதாக இருக்க வேண்டும். பலவகை மொழிகளும் பாடத்திட்டங்களும் கற்க மாணவர்களுக்கு பல ஆண்டுகள் ஆசிரியரின் உதவி தேவைப்படுகிறது, ஆனால் மாணவன் தானே முன்வந்து தனக்கான அறிவைப்பெறும் ஆற்றல் தன்னிடமிருப்பதாக உணரும் வகையில் அவன் கற்பிக்கப்பட வேண்டும் - எனும் சிந்தனை என்னை கவர்ந்தது
சிறிய புத்தகம், வினோபாவின் சிந்தனைகளை வாசித்து கருத்துகளை விவாதிப்போம்