தமிழை முத்தமிழ் என்பர். இயல், இசை, நாடகம் என்ற மூன்றாக விரிப்பர். இவற்றுள் இயல், இலக்கணத்தைக் குறிக்கும். இசை, பாடல்களைக் குறிக்கும்; நாடகம் ஒருவர் இருவர் பலர் தத்தம் வகையில் உரைப்பதன் கோவையைக் குறிக்கும். அந்த வகையில் இறை வடிவங்களும் இலக்கிய வடிவங்களும் என்னும் இந்நூல் இயல் என்னும் பகுதியைச் சேர்ந்ததாம். முழுக்க முழுக்க இலக்கணமாக இயல்புணர்த்தும் இதனை, மற்றைக் கலவைகளின் அழகையும் புணர்த்தியே படைத்துள்ளேன். இசைப் பகுதியும், நாடகப் பகுதியும் இடம்பெற்று அலுப்பில்லாமல் செய்திகளை அணுகவும் அடையவும் வைக்கும். இறை இலக்கணம், இறைவடிவ இலக்கணம், இலக்கிய இலக்கணம், இலக்கிய வடிவ இலக்கணம் இவற்றுக்குள் உண்டாகும் ஒப்பீட்டு இலக்கணமும் இந் நூலில் இடம்பெற்று இல&