பல நேரங்களில் பாசங்களே கையை இறுக்கும் சங்கிலியாக மாறி தனித்து இயங்கவிடாமல் தடை போடும்.
பெற்றவர்களை இழந்து நாலு வயது முதல் அப்பாவின் நண்பன் கௌசிக்கின் அன்பில் வளரும் முகுந்தன் அவரின் ஆசைப்படியே அவரின் இருமகளில் ஒருவளை தேர்ந்தெடுத்துக் காதலித்துத் திருமணம் செய்து கொண்டாலும் எவரின் ராசியோ அது நிலைத்துப் போகாமல் போகிறது.
சிறுவயது முதல் தன் தந்தையின் முதன்மையான பாசத்திற்கு இடைஞ்சலாக முகுந்தன் இருக்கிறான் என்ற கோபம் ஐஸ்வரியாவிற்கு இருப்பதால் வளர்ந்த பிறகும் அவனிடம் சண்டை போட்டுக் கொண்டே காதலிக்கிறாள் இதை அறியாத முகுந்தன் இரட்டை பிறவிகளான் அவளின் தங்கை சௌந்தர்யாவை காதலித்து மணந்து கொள்கிறான்.
காதல் தோல்வியால் படிப்பை காட்டி இந்தியாவை விட்டு வெளியேறிய ஐஸ்வரியா திரும்பி வரும் போது தன் பிள்ளையையும் கணவனையும் ஒப்படைத்துவிட்டுப் பிரசவத்தில் இறந்து போகும் சௌந்தரியாவால் சொல்லாத ஐஸ்வரியாவின் காதலும் நிறைவேறுகிறது.
முதலில் முரண்டுபிடிக்கும் முகுந்தனின் மனம் நிசர்தனத்தை ஏற்றுகொள்கிறது.
கௌசிக் முகுந்தன் மேல் அளவுகடந்த பாசம் வைத்து இருக்கார் தான் அதற்காக இத்தனை பக்கத்திற்கு அதையே வள வள என்று திரும்பத் திரும்பச் சொல்லியது குறைத்து இருக்கலாம்.