வல்லிக்கண்ணன் (ரா.சு. கிருஷ்ணசாமி) என்பவர் ஒரு தமிழக எழுத்தாளர். இவரது தந்தை ரா.மு. சுப்பிரமணிய பிள்ளை, தாய் மகமாயி அம்மாள். எழுத்தாளராக வேண்டும் என்பதற்காகவே அரசுப் பணியிலிருந்து விலகியவர். அரசுப் பணியிலிருந்து விலகிய பின்னர் தொடக்கத்தில் இதழ்களில் ஆசிரியராகப் பணிபுரிந்துள்ளார். பின்னர் சிறுகதை, நாவல், குறுநாவல், கட்டுரை என ஐம்பதுக்கும் மேற்பட்ட நூல்களை எழுதியிருக்கிறார். இவருடைய சிறுகதைகளில் சில ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டு பத்திரிகைகளில் வெளியாகியுள்ளன. இவருடைய பெரிய மனுஷி எனும் சிறுகதை அனைத்து இந்திய மொழிகளிலும் நேரு பால புத்தக வரிசையிலும் வெளிவந்துள்ளது. இவர் எழுதிய "வல்லிக்கண்ணனின் சிறப்புச் சிறுகதைகள்" எனும் நூல் தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையின் 2002 ஆம் ஆண்டுக்கான சிறந்த நூல்களில் சிறுகதை எனும் வகைப்பாட்டில் பரிசு பெற்றிருக்கிறது
அடக்குமுறையால் உண்டான வெறுப்பில் உருவாகும் புரட்சியின் சிறு தீப்பொறியே வரலாற்றை மாற்றி எழுதும் வல்லமையை உருவாக்கும்.
தமிழ்நாட்டின் இருண்டகாலம் என்று சொல்லப்பட்ட களப்பிரர் ஆட்சியை முடிவுக்குக் கொண்டுவந்த காலத்தை மையப்படுத்திப் பாண்டிய நாடு மீண்டும் எப்படிப் பாண்டியர்கள் வசம் வந்தது என்பதை சொல்லும் கதைகளம்.
சாதாரணக் குடிமகனான இளம்வழுதி தாய் ஊட்டிய குலப்பெருமையை நெஞ்சில் தாங்கி களப்பிரர்களிடம் இருந்து நாட்டை மீட்க மதுரைக்கு வருவதில் இருந்து தொடங்குகிறது அவனின் ஓட்டம்.
சிறு சிறு அலோசனை கூட்டங்களில் கலந்து கொண்ட இளம்வழுதி தங்களுக்கு உதவுவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்ட தமிழ்களே சுயலாபத்துக்காகக் களப்பிரார்களிடம் இவனை மாட்டிவிடப்போவதில் இருந்து தப்பித்து வீரர்களைச் சேர்த்து ஒரு பெரும் படையைத் திரட்டி மதுரையை ஆளுபவனை வெளியேற்றி அரியணையில் அமர்கிறான். “பாண்டியன் கடுங்கோன்” என்று பெயர் சூட்டப்படுகிறான்.
சரித்திர நாவலுக்கே உரிய எந்த ஒரு சுவாரசியமும் இல்லாமல் எழுதப்பட்டிருப்பதால் ஈர்க்கவில்லை.