ஏன் என்பதை அறிந்துகொள்ள, அழகான உறவுகளின் சங்கமத்தோடு மிக மென்மையான காதலையும் கலந்து, கடைசிவரை சுவாரஸ்சியம் குன்றாமல் பயணிக்கும் கதையோடு நீங்களும் பயணித்துப் பாருங்களேன்!
ஒருவரின் தவறுக்கு அவர்களின் சார்புடையவர்களுக்குத் தண்டனை தருவது ஏற்புடையதில்லை.
என்ன தவறு செய்தோம் எதற்காக மனதால் தன்னைக் காயப்படுத்துகிறார்கள் என்று தெரியாமல் துன்பத்தில் துவண்டு போகும் காவ்யாவின் வாழ்வின் சுவடுகளைச் சொல்வது தான் இக்கதை.
தன் பிறப்பை காரணமாக்கி காதலித்தவளின் தந்தை தன்னை ஏற்காமல் காதலியை பிரித்ததால் அக்குடும்பத்தின் மீது வெறுப்பாக இருக்கும் சந்தோஷின் கண்ணில் விழுகிறாள் காவ்யா.
படிப்பிற்காக இடம் மாறி தன் மாமன் வீட்டில் தங்கி இருக்கும் காவ்யாவிற்கு அங்குத் தங்குவதற்கு விருப்பம் இல்லை என்றாலும் கல்லூரி விடுதியில் இடம் கிடைக்கும் வரை தங்க வேண்டிய சூழலை புரிந்து கொண்டவள் அத்தை காட்டும் உதாசீனத்தையும் பொறுத்தே போகிறாள்.
தன் மாமன் மகள் சந்தோஷை விடாமல் துரத்தி காதலித்து அப்பா சொன்ன வார்த்தைக்காக அவனை விட்டு விலகியது தெரியாமல் இருக்கும் காவ்யா அவ்வீட்டில் இருப்பதையே காரணமாகக் கொண்டு அவன் தன்னை வதைக்கிறான் என்பதை அறியாமல் அதை சீனியர்கள் செய்யும் ராகிங் என்ற கணக்கில் எடுத்துக் கொண்டவள் அவன் வார்த்தைகள் வரம்பு மீறும் போது தான் குழப்பமடைகிறாள்.
துரத்தி துரத்தி காவ்யா மீது தன் வெறுப்பைக் காட்டும் சந்தோஷ் நாள்பட அவளில் தன்னைத் தொலைத்தே போகிறான்.
முக்கியக் கதாபாத்திரமாக இக்கதையில் வருபவர்கள் அனைவருமே ஏதோ ஒரு வகையில் தங்களின் குணத்தால் படிப்பவர்களை கவர்ந்துவிடுகின்றனர்.