Jump to ratings and reviews
Rate this book

கர்ப்பநிலம்

Rate this book
பல்லாயிரம் ஆண்டுகளாக ஈழநிலம் அடைகாத்து வைத்திருக்கும் அறத்தவிப்பை அதன் ஓட்டை உடைத்து வெளிக்கொணரும் முயற்சியில் முதல் வெற்றியை அடைந்திருக்கிறார் குணா கவியழகன். 'கர்ப்பநிலம்' நாவல் மூலம், ஈழத்தில் நிகழ்ந்த துயரங்களைப் பதிவு செய்வதோடு, ஈழத் தொல்குடிகளின் வேர்களையும் அதன் பண்பாடுகளையும் தேடித் தொகுக்கும் முயற்சியில் அவர் இறங்கியிருக்கிறார். ஆதித் தமிழனைத் தேடி ஒரு அகதித் தமிழன் செய்யும் வரலாற்றுப் பயணம் இது. தேசியம், தேசிய இனத் தன்னுரிமை, கம்யூனிசம் ஆகிய கோட்பாடுகளின் துணைகொண்டு ஈழப் போராட்டத்தை விசாரணை செய்கிறார்.

336 pages, Paperback

Published December 1, 2018

9 people want to read

About the author

Kuna Kaviyalahan

6 books8 followers
Kuna Kaviyalahan has written three novels. His first novel Nanchundakaadu won the Tamil literary garden fiction award for 2014. His third novel Appaal oru Nilam won the Vasaga Salai best novel award for 2016 . Vidameriya kanavu / The Poisoned Dream is a harrowing tale of a Tamil tiger facing incarceration, torture, the possibility of death, and the faint hope for escape

Ratings & Reviews

What do you think?
Rate this book

Friends & Following

Create a free account to discover what your friends think of this book!

Community Reviews

5 stars
1 (25%)
4 stars
3 (75%)
3 stars
0 (0%)
2 stars
0 (0%)
1 star
0 (0%)
Displaying 1 of 1 review
Profile Image for Elankumaran.
150 reviews25 followers
February 9, 2025
கர்ப்பநிலம் ❤️

இருளில் மூழ்குகிறது குடாநாடு. செம்மணியும் நாவக்குழியும் மிதிபட்டுத் துடிக்கின்றன. குரலொலிகளில் குமுறுது வானம். உடலும் மனமும் உணர்வற்று ஓய உயிர்தேடி ஓடுது சனம். 95ன் இறுதிப்பகுதியில் யாழில் நிகழ்ந்த மாபெரும் இடப்பெயர்வை மையமாகக் கொண்டு விரிகிறது இந்தக் கர்ப்பநிலம்.

மண், குலம், குடும்பம், காதல், காமம், சமூகம், சாதி, புரட்சி, போர், அதன் நியாய அநியாயங்கள் என குணா கவியழகனின் எழுத்து எல்லாவற்றையும் ஒன்றாய்ச் சேர்த்து அலசிச் செல்கிறது. இருதரப்பின் பக்கத்தில் இருந்து நகரும் கதையும் வரலாற்றுத் தகவல்களை உள்ளடக்கிய கதையாடலும் கூடுதல் சிறப்பு. வன்னி நிலம் தொடர்பான நாகமணியின் கனவு கதை முடிந்தபின்பும் கண்முன்னே காட்சியாய் நீள்கிறது.

[“யதார்த்தத்தை நோக்கி இலட்சியத்தைத் திருப்பினால் அவன் வியாபாரி. இலட்சியத்தை நோக்கி யதார்த்தத்தைத் திருப்பினால் அவன் போராளி.”
—புத்தகத்திலிருந்து]
Displaying 1 of 1 review