கொஞ்ச மாதங்களுக்கு முன்பு இணையதளத்தில் நார்த்தில் இருக்கும் பிரபல கோடீஸ்வரர் தன் “அழகிய” மகனை சவுத் இந்தியாவிற்கு அனுப்பி உலக அறிவை அறிந்து கொள்ளச் செய்த நியூஸ் படித்து இருப்போமே அது தான் இந்தக் கதையின் இன்ஸ்பிரேஷன்.உண்மை சம்பவத்தில் பையன் கேரளாவில் கதையில் பையன் மதுரையில் நாட்டு நடப்பை அறிந்து கொள்கிறான்.
பணத்திலே புரளும் ஹர்ஷவர்தன் வெளிநாட்டில் படிப்பை முடித்துக் கொண்டு இந்தியா வந்தவுடன் தந்தையிடம் இருந்து தொழிலை தனதாக்க முயல, ராஜஸ்தானில் தான் உருவாக்கிய சாம்ராஜ்ஜியத்தை ஆள பட்டபடிப்பு மட்டும் போதாது என்று பத்தாயிரத்தை மட்டும் மகனிடம் கொடுத்து சவுத் பக்கம் அவனை அனுப்பி வைத்துவிடுகிறார் அவனின் தந்தை.
தந்தை மேல் கோபத்தில் இருப்பவனுக்கு “உழைப்பின் ருசி” பிடித்துப் போகிறது, வெளிநாட்டில் படித்துப் பல பெண்களுடன் உறவில் இருந்தவனாக இருந்தாலும் “அச்சம்,மடம்,நாணம்,பயிர்ப்பு” இதையனைத்தையும் ஒருங்கே கொண்ட பனிமலரை பார்த்தவுடனே பிடித்துப் போகிறது ஹர்ஷாவிற்கு, அவனின் கொள்ளையடிக்கும் அழகை கண்கள் கண்டவுடன் அவனை இதயத்தில் நிரப்பிக் கொள்கிறாள் பனிமலரும்.
ஹர்ஷாவின் “குளிர்காச்சலை” போக்க தன்னையே தந்த பனிமலரை திருமணம் செய்யப் பெற்றவர்களுடன் வருவேன் என்று சென்றவன் விபத்தில் அம்னீஷியாவால் பாதிக்கப்பட்டுப் பனிமலரின் கண்ணீரால் மீண்டு வருகிறான்.
நல்ல தோழியாக அனிதா புத்தி சொன்னாலும் அதைக் காதில் வாங்காத பனிமலர் அழுது கரைந்த பிறகே கரை சேர்கிறாள்.