மனிதர்களின் பயம் என்ற உணர்ச்சியைச் சரியாக உபயோகித்தால் எவ்வகைக் காரியத்தையும் சுலபமாக செய்ய முடியும்.
சிதலமடைந்த குரங்குதுரை பங்களாவை ஆராய்ச்சி செய்யப் போன முரளிதரன் இரத்த குழாய் வெடிப்பு ஏற்பட்டு இறந்து போனதை கொலை முயற்சியோ என்று சந்தேகம் கொண்ட அவரின் மனைவி கிரைம் ஆபிசர் நிஜந்தனின் உதவியை நாடுகிறார்.
ஆங்கிலேயரான குரங்குதுரையின் ஆவி தான் இக்கொலைகளைச் செய்கிறது என்று அந்த ஊரில் இருக்கும் மூடநம்பிக்கையைத் தகர்த்தெறிய அங்கேயும் தங்கும் நிஜந்தனுக்குச் சில திகில் நிகழ்வுகளும் நடக்கிறது.
குரங்குதுரையால் பிறந்த குமரப்பன் அவரைப் போலவே விகாரமான முக அமைப்பை கொண்டு இருப்பதால் மற்றவர்களின் கேலியில் இருந்து தப்பிக்க ஊரைவிட்டு போனவன் மீண்டும் அங்கே வந்து தன் தாயை குரங்குதுரையிடம் ஒப்படைத்தவர்களைப் பழிவாங்குகிறான்.இவனின் முகத்தைப் பார்த்தவர்கள் ஆவி என்று பயம்கொண்டது குமரப்பனுக்குச் சாதகமாகிறது.
குமரப்பன் நிஜந்தனிடம் பிடிப்பட்டவுடன் அனைத்து மர்மங்களும் விலகுகிறது.
நிஜந்தன் என்ற போலீஸ் அதிகாரியின் தங்கையான ஸ்வேதா தனது தோழி மாதுரிக்கு ஒரே பிரச்சனை என்று சொல்கிறாள். ஸ்வேதாவின் தோழி மாதுரியின் கணவரான முரளிதரன் ஆராய்ச்சி சம்பந்தமாக கள்ளல் என்ற கிராமத்தில் உள்ள 'குரங்குதுரை பங்களா'வில் ஒரு வாரம் தங்கியிருக்கிறார். ஏற்கனவே அங்கு சில பேர் மரணமடைந்திருப்பதால் அந்த பங்களாவில் குரங்கு துரையின் ஆவி நடமாடுவதாக கிராமத்தினர் பேசிக் கொண்டனர்.
அந்த பங்களாவில் தங்கியிருந்த முரளிதரன் சரியாக ஏழாவது நாள் இருதயத்திற்கு செல்லும் குழாய் வெடித்து மரணமடைந்துள்ளார். இது இயற்கையான மரணம் போன்று தெரியவில்லை என்றும் தன் வீட்டு லைப்ரரியில் கிடைத்த லெட்டரை பற்றியும் சொல்ல போலீஸ் அதிகாரியான நிஜந்தன் நேரடியாக 'குரங்குதுரை பங்களா'வில் ஒரு வாரம் தங்கி அங்கு என்ன அமானுஷ்யம் இருக்கிறது என்பதை கண்டறிய புறப்படுகிறார். அங்கு நிஜந்தனுக்கு என்ன நடந்தது? இந்த கொலைகள் இயற்கையானவையா இல்லை வேறு யாராவது இதற்கு பின்னால் இருக்கிறாரா என்பது தான் மீதி கதை!
கதை தொடங்கியது முதல் திகிலாகவும் விறுவிறுப்பாகவும் செல்கிறது. ஒரு திகிலூட்டும் திரைப்படமாக இந்த கதை மாறுவதற்கு அனைத்து சாத்தியக் கூறுகளும் இருக்கின்றன. வழக்கமான ராஜேஷ்குமார் நாவல்களில் இருந்து விலகி இந்த கதை முற்றிலும் மாறுபட்ட அனுபவத்தைக் கொடுத்தது.
இந்த கதையை சிறப்பான ஆடியோ தொழில்நுட்பத்தில் ஆடியோ புத்தகமாக பதிவேற்றிய DEEP TALKS TAMIL AUDIOBOOKS குழுவினருக்கு நன்றிகளும் வாழ்த்துகளும் 🙏💙. இவர்களது குரலோடு இரவில் இந்த கதையை கேட்கும் போது மிகவும் திகிலாக இருந்தது. மேலும் பல தரமான ஆடியோ புத்தகங்களை எதிர்ப்பார்க்கிறேன் இவர்களிடமிருந்து. இந்த கதையை அனைவரும் கேட்டோ வாசித்தோ மகிழுங்கள்😊.
A different 'Crime/Mystery/Suspense/Thriller' novel written by Rajesh Kumar sir. An archeological officer visits 'Kurangu Durai' bungalow in a Village which is touted to be haunted by the Ghost of 'Kurangu Durai' (British Officer - who has a monkey face), who is the Owner of that house. The Archeological Officer 'Muralidharan' mysteriously dies inside the bungalow due to Heart Blood Vessel burst. His wife files complaint and investigation officer 'Nijandhan' comes to village and stays there to find out the Truth. He uncovers the mystery and all of the murders is a human activity (not any ghost) by a descendant of British officer 'Kurangu Durai', who resembles 'Kurangu durai' and is teased by the Villagers. He seems to have absconded and fled the Village. But he has hidden himself in this Bungalow and took revenge on the Villagers who teased him. Since he resembles his father, people of the Village mistook him as Ghost of 'Kurangu Durai' and he used it to his advantage. A superb interesting engaging read !