Balakumaran was born in Pazhamarneri village near Thirukattupalli in Thanjavur district in 1946. As a child, he was highly inspired by his mother, who was a Tamil scholar and a Siromani in Sanskrit, used verses of Sangam and other ancient literature to motivate him when ever he was emotionally down. This created a deep interest in Tamil literature which made literature his passion. His first stories were published in a literary magazine called ‘Ka-Sa-Da-Tha-Pa-Ra’ and for which he was also a founding member, a self-anointed militant literary journal that had been launched with a mission to blaze new trails in modernist literature.
He has also contributed to Tamil periodicals such as Kalki, Ananda Vikatan, Saavi and Kumudam. Later he became a famous Tamil writer, author of over 200 novels, 100 short stories, and dialogue/screenplay writer for over 14 films. His writings are noted for a distinct philosophical and religious tone. He is fondly called 'Ezhuthu Sithar' by his fans. He is a disciple of "Sri Yogi Ram Surath Kumar".
In his many novels he shows immense interest in enlightenment. He is considered as "Maanasiga Guru" for many individuals, who are in search of the formless almighty. His lucid but powerful expressions of man-woman relationship and human-God union is a tribute to mankind.
பாலகுமாரனின் எழுத்து அனைவருக்கும் புரிந்து விடுவதில்லை. நான் அவருடைய புத்தகங்களை இதுவரை படித்தவரையில் எல்லாம் ஒரு கதை போல ஆரம்பிக்கும் ஆனால் இறுதியில் ஆழ்ந்து சிந்திக்க வைக்கும். இந்த கதையை படித்தபின் மாதவனின் அப்பாவை போல் நமக்கும் வாழ்க்கையை கற்று தர ஒருவர் வேண்டுமென ஆசை வரும். அத்தனை ஞானம், பொறுமை மற்றும் வாழ்க்கையை பற்றிய புரிதல். "மனதோடு பேசு": எல்லா சூழ்நிலைகாண பொதுவான மற்றும் உயர்ந்த பாடம். இந்த கதையில் குறிப்பாக 31வது பகுதி மிகவும் அருமை. ஒரு முறைக்கு மேலாக படிக்க வேண்டிய பாகம்.
#193 Book 34 of 2023- கடலோரக் குருவிகள் Author- பாலகுமாரன்
“நிரந்தரமாய் சந்தோஷப்பட்டவனுமில்லை.நிரந்தரமாய் துக்கப்பட்டவனுமில்லை.உங்கள் பிரச்னைகளுக்குத் தீர்வைப் பிறரிடம் கேட்காதீர்கள்.நீங்களே தேடுங்கள்.இன்று தீர முடியாத பிரச்னை நாளை சுலபமாய் தீர்ந்து போய்விடும்.நாளைக்கு வேறு பிரச்னை தீர்க்கச் சொல்லி முளைக்கும்.”
புத்தகம்,சினிமா,இசை மிகவும் பிடிக்கக் காரணம் அவை என்னுள் ஏற்படுத்தும் தாக்கம் தான்.ஒவ்வொரு முறை பாலகுமாரன் கதைகள் படிக்கையில் ஏன் இத்தனை ஆண்டுகள் இவர் புத்தகங்களை வாசிக்காமல் போனேன் என்ற ஏக்கம் எழுவதை தவிர்க்க முடியவில்லை.வாழ்க்கைப் பாடத்தை இவரைப் போல் கற்ப்பிக்க யாராலும் முடியாது.இந்த கதைக்கு ஏன் இந்த தலைப்பு என கடைசி அத்தியாயத்தில் புரிகிறது.
மாதவன்,மீனாட்சி பற்றிய கதை.மாதவனின் குடும்பம் மிகவும் ஏழ்மையில் தவிக்கிறது.அவனின் அப்பா புரோகிதம் செய்பவர்.கோயில் பட்டை சாதத்தில் தான் அவர்கள் வாழ்கிறார்கள்.அத்தனை வறுமையில் அறம்,தர்மம் காக்கும் மாதவனின் தந்தை கதாபாத்திரம் பல நேரங்களில் நம்மை சிலிர்க்க வைக்கிறது.மீனாட்சி-பணக்கார வீட்டுப் பெண்,சொடக்குப் போட்டால் அத்மனையும் விரல் நுனியில் நிற்கும்.மாதவனுக்கும் மீனாட்சிக்கும் இருக்கும் ஒரு ஒற்றுமை-இருவர் வாழ்விலுமே நிம்மதி இல்லை என்பது தான்.அவர்கள் இருவரும் சந்திக்க நேர்கிறது.அதன் பின் அவர்கள் வாழ்க்கையில் என்னவெல்லாம் நடக்கிறது என்பது தான் கதை.
ஒவ்வொரு வசனமும் class!மாதவனின் அப்பா பேசும் எல்லாமே கல்வெட்டுகளில் பொறிக்கப்பட வேண்டியவை.முயற்சி,கடவுள்,ஆசை,வாழ்க்கை,வெற்றி பற்றி நமக்கிருக்கும் அபிப்பிராயங்களை முற்றிலும் மாற்றும் வல்லமை இந்த புத்தகத்திற்கு உண்டு. “மனதோடு பேசு” என்று மாதவன் அப்பா சொல்வது வாழ்க்கையின் எல்லா சூழ்நிலைகளிலும் பொருந்தும்.நம் மனதை கண்ணாடிப் போல் பிரதிபலிக்கிறது பல பக்கங்கள்.மிக மிக சாதரண கதை,ஆனால் ஆழமான படைப்பு.கடைசி 3 அத்தியாயம் போதும்-எந்த motivation/self-help books/ted talks என எதுவுமே தேவையில்லை வாழ்க்கையை கற்றுக்கொள்ள.
இது படித்தப் பின் மனதில் வரும் அமைதி நிரந்தரமானது.நம்மை நாம் புரிந்துக் கொள்ள வேண்டும்.நம் நிறை,குறைகள் நமக்குத் தெரிய வேண்டும்.அதற்கு நாம் மனதோடு பேச கற்றுக்கொள்ள வேண்டும்.அதை கற்றுத் தருகிறது இந்த புத்தகம்.”உள்ளே தோன்றும் அமைதிக்குப் பெயர் தான் அன்பு.எந்த எதிர்பார்ப்பும் இல்லாத அன்பு.இந்த அன்பு எதையும் சாதிக்குமர பலம் உள்ளது.”
I first got to know about Kadalora Kuruvigal 10 years back when my math teacher quoted excerpts from it. After falling off my radar for the greater part of the decade, I bought the book a couple of years back and got around to reading it last week.
Terrific writing! The interspersed fiction and philosophy play well and crescendo upto chapters 30, 31, and 32. The heavy slang was a bit icky at first but the book appeals beyond that to make for an unputdownable read.
வாழ்க்கையின் தத்துவங்களை கதைகளை கொண்டு மிக அருமையாக சொல்லி இருக்கிறான்...... உண்மையாகவே.... நன்றாக இருந்தது..... அனைவரும் படிக்கவும்..... சில வாக்கியங்கள்... மனதை தெளிவாக படம் பிடித்து காட்டியது.....
Very few books manage to offer us hope, positivity and strength to face and grow from difficulties. This is one such book. Grateful for the book and for writer Balakumaran
Last 3 Chapters a goodread. கடைசி 3 அத்தியாயம் நன்று
முதல் முறையாக மறைந்த பாலகுமாரன் அவர்களின் இந்த நாவலை வாசித்து பார்த்தேன். மிக எளிமையான கதைக்களம். கடைசி மூன்று அத்தியாயங்கள் வாழைப்பழத்தை உரித்துக்கொடுத்தது போல் இருந்தது. அதை மட்டும் படித்தாலே போதும்.