சூழ்நிலைகளுக்கு ஏற்ப தன்னை மாற்றிகொள்ளும் மனிதனால் மற்றவர்களே பெரும் பாதிப்புக்குள்ளாகுகின்றனர்.
வயதானவனை இரண்டாம் திருமணம் செய்து ஏமாந்து போனேன் என்று புலம்பும் அம்சா பார்ட்டி நடக்கும் இடத்தில் குடித்துவிட்டுப் போதையில் வீட்டிற்கு வந்தால் கணவனின் தோழனான பின்னணி பாடகன் அமிர்தம் மட்டும் இருப்பதைப் பார்த்தவள் அவனிடம் தவறாக நடக்க முயலும் போது கணவன் வரும் சத்தத்தைக் கேட்டு அவனைக் கொன்று விட்டுத் தன்னைத் தவறாக அவன் நெருங்கினான் அதனால் கொன்றேன் என்ற பழியைப் போட்டுவிடுகிறாள்.
மனைவியின் வார்த்தையை நம்பி அமிர்தத்தின் முகத்தைச் சிதைத்துவிட்டுக் கூவத்தில் உடலை வீசி விடுகிறார் டாக்டர் ரகுபதி.இதை அந்த வழியாகச் செல்லும் ரோகிணி பார்த்ததால் குற்றவாளியை கிரைம் பிராஞ்ச் அதிகாரி விவேக் நெருங்க சாட்சியாக மாறுகிறது.