காத்திருக்கும் முடிவை எடுக்கும் போது அறிவின் வசம் பிடிக்கொடுக்காமல் ஆழ்மனம் காட்டும் திசையே பிற்காலத்தில் எதிர்பாராமல் எப்போதோ மனம் விரும்பியதை நிறைவேற்ற வாய்ப்பை அமைத்துக் கொடுக்கும்.
பெற்றவர்களை மீறி தான் இணைந்தார்கள் என்பதனால் கஷ்டப்படும் நேரத்திலும் யாருடைய உதவியும் இல்லாமல் தந்தையை இழந்த பிறகு தாயின் கடும் உழைப்பில் தான் வாழ்ந்து கொண்டு இருக்கிறோம் என்பதை உணர்ந்தே படித்து மாநிலத்தில் முதலாவதாக வரும் ஐஸ்வர்யா ஒரு பிரபஞ்ச பேரழகி,அன்பால் அனைவரையும் தன் வசம் இழுத்துவிடுவாள். அவளை மாதிரி புரிந்து கொண்டு நடக்கும் ஒருவளை உலகத்தில் வேறு எங்கே தேடினாலும் கிடைக்க மாட்டாள் ஏனென்றால் அவள் தான் கள்ளக்குறிச்சியில் பள்ளிப் படிப்பை முடித்துவிட்டுத் திருவண்ணாமலையில் மருத்துவம் பயின்று திரும்பவும் கள்ளக்குறிச்சியிலே மக்கள் சேவைக்காக மனநல மருத்துவராக இங்கேயே இருக்கிறாளே.
மருத்துவக் கவுன்சிலிங்க்காக வந்த இடத்தில் முதன் முதலாகத் தன்னிடம் பேசிய “ஆண்மகனான” ஹரியுடன் தான் தன் வாழ்வு என்ற குறிக்கோளுடன் இருக்கும் ஐஸ்வர்யாவிற்கு அவனிடமிருந்து சாதமான நடவடிக்கையே பதிலாகக் கிடைக்க இன்ப கனவில் உலாவருபவளை துன்பத்தில் ஆழ்த்த ப்ரீத்தி வந்து சேர்கிறாள். ஐஸ்வர்யாவின் அழகில் , குணத்தில் நட்பில் நெருக்கமாக இருந்த ஹரியை “தன் அங்க வளைவுகளாலும்,அவனின் உணர்ச்சிகளைத் தன் தொடுகைகளால் உசுப்பேற்றிவிட்டு” தன்னிடமே அவனை ப்ரீத்தி இழுத்துக்கொள்கிறாள்.
காதல் தோல்வியைப் புறந்தள்ளிவிட்டுப் படித்துப் பிரபலமான மருத்துவராகும் ஐஸ்வர்யா , தாய் உயிரைக் கேட்டாலும் கொடுப்பேன் என்று சூளுரைப்பவள் ஹரியை நினைத்து – நினைத்து- நினைத்துத் திருமணத்திற்கு மட்டும் மறுத்துவருகிறாள்.
பணக்கார ப்ரீத்தி விவசாயி மகனான ஹரியின் காதலை காற்றில் பறக்கவிட்டு அமெரிக்க மாப்பிள்ளையை மணந்ததால் மனஉளைச்சலில் தன்னிலையை இழந்தவனைக் குணப்படுத்த ஐஸ்வரியாவிடம் ஒப்படைக்கின்றனர் அவனின் பெற்றோர்.
தன் காத்திருப்பின் பலன் கிடைத்ததாக எண்ணி – எண்ணி – எண்ணி மகிழ்ந்து குணப்படுத்தி அவனிடமே சரணாகதி அடைகிறாள் “இளகிய இதயம் கொண்ட” ஐஸ்வர்யா.