ஒரு காதலால் பிரிந்த உறவுகளைச் சேர்க்க அதே காதலின் உதவியால் தான் முடியும் காலம் கடந்தாலும்.
மலை சார்ந்த கிராமத்திற்கு வரும் ரவீந்திரன் எதிர்பாராமல் விபத்தில் அடிபட அங்கே இருக்கும் அரசாங்க மருத்துவர் கீதாவின் மேல் பார்த்தவுடன் காதல் கொள்கிறான். பத்திரிக்கையாளரான தான் கிராமத்து கட்டுரை எழுத வந்த இடத்தில் இந்த மாதிரியானதால் தன்னைப் பார்த்துக்கொள்ள யாருமில்லை என்று சொல்பவனைத் தன் வீட்டுக்கு அழைத்து வருகிறாள் தாத்தா அனுமதி அளித்தால் அங்கே தங்கி கொள்ளலாம் என்று சொல்கிறாள்.
முதலில் முரண்டுபிடிக்கும் குடும்பத்தினர் பிறகு ஒத்துக்கொள்கின்றனர். அத்தை மகன் ஹரிக்கு தான் இவளை மணமுடிக்கனும் என்று முடிவெடுத்து இருந்தாலும் மனது ரவீந்திரனை காதலிக்கத் தொடங்குகிறது. அவனைப் பார்க்க வந்த அவனின் தங்கை கீதாவின் அண்ணனை காதலிக்கிறாள்..
ஏற்கனவே அந்த வீட்டின் மூத்தமகன் சினிமா நடிகையைக் காதலித்து வீட்டை விட்டு சென்றதால் காதலுக்கு எதிர்ப்பாகிறது அந்தக் குடும்பம். அப்படி விலகிய மகனின் மகன் தான் இந்த ரவீந்திரன் தற்போது ஆந்திர திரையுலகின் முண்ணனி கதாநாயகன்.
சில சண்டைகள் போட்டுச் சமாதானம் ஆகி பெரியவர்களை மன்னித்து சின்னவர்களுக்குத் திருமணத்தை நடத்துகின்றனர்..