Prapanchan (Tamil: பிரபஞ்சன்), is the pseudonym of S. Vaidyalingam (Tamil: சாரங்கபாணி வைத்தியலிங்கம்) a Tamil, writer and critic from Puducherry, India.
He started his career as a Tamil teacher in Thanjavur. He also worked as a journalist in Kumudam, Ananda Vikatan and Kungumam. In 1961, he published his first short story Enna ulagamada in the magazine Bharani. He was influenced by the Self-Respect Movement. He had published 46 books. In 1995, he was awarded the Sahitya Akademi Award for Tamil for his historical novel Vaanam Vasappadum (lit. The Sky will be ours) set in the times of Ananda Ranga Pillai. His works have been translated into Hindi, Telugu, Kannada, German, French, English and Swedish. His play Muttai is part of the curriculum in Delhi University and his short story collection Netrru Manidhargal is a textbook in many colleges.
மோசமான மனிதர்கள் இருக்கும் இடத்தைச் சுத்தப்படுத்துவேன் என்று களமிறங்கினால் முடிவில் அவர்களை மாதிரி தான் உன்னை ஆக்கிவிடுவார்கள் உன் நல்ல குணங்கள் அனைத்தும் ஒடிஒளிந்துகொள்ளும்.
தனக்கு உதவி செய்தவரையே வஞ்சகத்தால் வீழ்த்த துணைபுரியும் போது அதே வஞ்சகத்தை வேறு ஒருவன் கையில் எடுப்பான் உன்னை வீழ்த்த இது தான் நியதியாகிறது.
பாசமான குடும்பத்தில் படித்துச் சுயமாக நிற்கவேண்டும் என்றும், வேலைக்குப் போய்த் தான் தன் குடும்பத்தைக் காக்க வேண்டும் என்ற அவசியமில்லாமல் இருந்தாலும் அரசியல்வாதியான மாமாவிடம் வேலைக்கு வருகிறான் மூர்த்தி. எதாவது நல்ல வேலையில் தன்னைச் சேர்ப்பார் என்று எதிர்பார்க்க தனக்கு பி.ஏ வாக்கி கொள்கிறார்.
வெளிநாட்டு கம்பெனிக்கு நிலத்தை விற்க இவனைப் பினாமியாக்கி கம்மி விலையில் நிலங்களை வாங்கி அதிக விலைக்கு விற்றுப் பெரும்பணத்தைச் சம்பாதிக்கும் மாமாவிடமிருந்து இவனுக்கும் கொஞ்சம் பணம் சேர்கிறது.
முதலமைச்சரிடம் பழக்கம் உள்ள பழைய நடிகை கோகிலாவின் மகள் விநோவின் அறிமுகம் கிடைத்து அவள்பால் காதலும் கொள்கிறான். இருவரும் காதலித்தாலும் தற்போது அரசியலை வெறுக்கும் விநோ இவனைத் திருமணம் செய்ய முடியாது என்று டெல்லிக்கு சென்று ஒரு பள்ளியில் ஆசிரியராகிறாள்.
மூர்த்தியின் புத்திசாலி தனத்தால் அரசியலில் இருந்த அவனின் மாமா பின்னுக்குத் தள்ளப்பட்டு இவன் கை ஒங்குகிறது. நிலமோசடி வழக்கு சிபிஐக்கு மாறத் தன்னை யோக்கியனாகக் காட்ட முதலமைச்சர் இவனின் மாமாவை மாட்டிவிடுகிறார் அதற்கு மூர்த்தியும் உடந்தை. அனைவரும் ஒதுங்கி தனியாளாகிவிட்ட மாமாவை தேடி அவனின் மனைவி வருகிறாள் ஏற்கனவே கருத்து வேறுபாடால் பிரிந்து இருந்தவள். தன் தவறை உணர்பவர் மூர்த்திக்கும் இதே நிலமை என்றாவது ஒரு நாள் வரும் என்று உபதேசத்தோடு விலகி கொள்கிறார்.
மூர்த்தியின் செல்வாக்குக் கட்சியில் உயர உயர பணமும் சேர்ந்து கொண்டே போகிறது ஆனா நிம்மதி இல்லாமல் தவிக்கிறான். தன் காதலனை அரசியலில் இருந்து வெளி கொண்டுவர தான் அதில் குதித்துதான் ஆகவேண்டும் என்ற கட்டாயத்தில் விநோ அரசியலில் பிரவேசிக்கிறாள். இளம்பெண்ணான அவளைப் பற்றிய வதந்திகள் எல்லையில்லாமல் கண்டபடி பரவத் தன் அரசியல் வாழ்விற்கு முற்றுபுள்ளி வைத்து அவள் வேலை செய்யும் பள்ளியிலே அவனும் வேலைக்குச் சேர்கிறான்.
ஒவ்வொரு கதாபாத்திரமும் செதுக்கியது போல அவர்கள் வாழ்க்கை அதில் ஒரு நெறி என்று செல்கிறது.
நடிகை கோகிலா,விநோ, மகன் பினாமியாக இருந்து சேர்த்த பணத்தைத் தொடமாட்டேன் என்று வீம்பாக இருக்கும் மூர்த்தியின் அப்பா, என்று அனைத்தும் அவர் அவர்கள் நியாயங்களை எடுத்துரைக்கிறது மறுக்கமுடியாதவைகளாக.