ஒருவர் தமது மகனுக்காக நாடிஜோதிடம் பார்க்கும் பொழுது, “ஈராறாண்டிற்கு அப்பால் கண்டம் வாகடச் செலவுண்டு பயமில்லை தானே” – -என வந்திருந்தது. அதனைப் படித்த நாடிஜோதிடர் “‘12 வயதிற்கு மேல், பிற்காலத்தில் குழந்தைக்குக் கண்டம் ஏற்படும்’ என்றும், ‘மருத்துவத்தால் குணமாகும்’ என்றும் முனிவர் கூறியுள்ளார், அதனால் பயப்படவேண்டியதில்லை” என்றும் குறிப்பிட்டுள்ளார். ஆனால் அவர் சொன்னதற்கு மாறாக, அந்தக் குழந்தையின் 12வது வயதிலேயே, அந்தக் குழந்தை கடற்கரையில் விளையாடிக் கொண்டிருக்கும் பொழுது, கடலுக்குள் அடித்துச் செல்லப்பட்டு, பின்னர் மீட்கப்பட்டு, மருத்துவமனையில் சேர்த்துப் பின் உயிர் பிழைத்தது. இங்கும் நாடிஜோதிடரின் கணிப்பில்தான் தவறு நேர்ந்துள்