அநீதிக்கு எதிராகச் செயல்பட அதிகாரம் தேவை ,அந்த அதிகாரத்தைத் தக்க முறையில் பயன்படுத்த தெரிந்தவனுக்கு மட்டுமே வெற்றிகள் கிட்டும்.
மக்களின் நன்மைக்காகப் போராடுபவர்களின் போராட்டங்களுக்கு என்றுமே முடிவு என்பது இல்லை..
ராஜபரம்பரையை சேர்ந்த ஜீவா இராணுவத்தில் இருந்து விடுமுறைக்காக வீட்டிற்கும் வரும் போது அந்த ஊரில் பெண்களைக் கடத்தும் கும்பலுக்கு எதிராகச் செயல்படும் போது அது தோல்வியில் முடிய இராணுவத்தில் இருந்து வெளியேறி போலீஸ் அதிகாரியாகத் தன் ஊரிலே வேலையில் அமர்ந்து அனைத்து அரசியல்வாதிகளுக்கும் தொல்லை தருபவனாகிறான்.
எஸ்.பி ஜீவா தன் ஏரியாவை முழுகட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து மக்களுக்கு இடையூராக இருக்கும் அனைத்திற்கும் தடை போட்டதால் மக்களிடம் அன்பை பெற்றவன் அதனால் எதிரிகளையும் சம்பாதித்துக் கொள்கிறான்.
ஜீவாவின் அப்பா ஸ்ரீநாத் லாயராக இருப்பது ஜீவாவிற்குப் பெரிதும் பலம் சேர்கிறது.
ஜீவா இருக்கும் ஊருக்கு கலெக்டராக வரும் ஜீவிதாவிற்கும் அவனைப் பற்றித் தப்பான பிம்பத்தை முதல் நாளிலே எழுப்பிவிட்டதால் அவனை எதிரியாகவே பாவித்து அவனை அடைக்கி ஆள முற்படுகிறாள்,இதனால் இருவருக்கும் சாதகமற்ற சூழலே உருவாகுகிறது.
ஜீவிதாவின் தாய் ஜீவாவின் மேல் பாசத்தைப் பொழிய அதுவும் மகளுக்கு அவன் மேல் வன்மத்தை உண்டாக்குகிறது.
ஜீவாவின் தொடர் நடவடிக்கைகளைப் பார்த்து அவன் மீது வந்த மதிப்பை காதலாக மாற்றிக் கொள்கிறாள் ஜீவிதா.
வெறுப்பைக் கக்கிக் கொண்டிருந்த ஜீவிதாவின் மனம் காதலால் நிரம்பிவிடுகிறது.
உள்துறை மந்திரியின் மகனே கடந்த பத்து வருடங்களாகப் பெண்களைக் கடத்தி பாழாக்கியது என்ற உண்மையைக் கண்டுபிடித்தவன் நியாயத்திற்காக மந்திரி மகனை குற்றவாளி என்று நிரூபிப்பதற்குள் பல போராட்டங்களை எதிர்கொண்டு அதில் வெற்றிப் பெறுகிறான்.