இலங்கை இன்று போர்க்காலத்தின் தீவிரநிலைக்குத் தள்ளப் பட்டுள்ளது. சிங்களவரின் மனிதாய சக்திகளும் இலங்கைத் தமிழரின் மனிதார்த்தங்களும், இந்தத் தீவிரநிலையை அறிவு சான்ற தளத்துக்குக் கொண்டு செல்ல முடியாதவாறு நிலைமை ஆக்கப்பட்டு விட்டது. இந்நிலை தவிர்க்கமுடியாதவாறு நிகழ்ந்த ஒன்றுதானா? இதற்கு இரு பிரிவினருள் ஒருவர் மட்டும் தான் பொறுப்பாளியா? இத்தகைய கேள்விகளின் சலனங்களைக் கூட எழவிட முடியாத தீவிரநிலைதான் இன்றுள்ளது என உணர்கிற போதே இக்கேள்விகள் கேட்டாக வேண்டியவை என்பதையும் நாம் கண்டுகொள்வது மிக அவசியம். - பிரமிள் 12 டிசம்பர் 1984