தனக்கு சம்மந்தமில்லா பிரச்சனைகளில் இருந்து ஒதுங்கி போவது நன்மைப் பயக்கும் என்பதை சரியாக புரிந்து கொண்டு அதைத் தவறாகச் சொந்தப் பிரச்சனையில் நடைமுறை படுத்தும் போது உறவுகளின் மத்தியிலும் உணர்வுகளின் பிடியிலும் அகப்பட்டு எதிர்பாரா முடிவையே எடுக்க வேண்டிவரும்.
பள்ளிப்படிப்பை மட்டும் தான் முடித்து இருக்கிறாள் என்று அறிந்தவுடன் சுமித்ராவை நிராகரிக்க முடிவெடுத்த வினோத் அவளின் அழகில் தன்னைத் தொலைத்து வாழ்க்கைத் துணையாக ஏற்றுக் கொண்டு அடுத்தவர்கள் சொல் பேச்சை கேட்டு தனக்கு அவள் சரியான இணை இல்லை என்பதாகச் சொல்லி விவாகரத்து வரை செல்கிறான்.
தந்தையின் புறகணிப்பால் தாத்தாவுடன் வளர்ந்த வினோத் குடும்ப அமைப்பிற்குள் வராமல் தன்னிஷ்டப்படி வாழ்ந்தவனைத் திருமண வாழ்வு இழுத்துப்பிடிக்கப் பலவகையாகக் குழம்பியவன் எடுத்து விவாகரத்து முடிவை அவனே மீண்டும் பரிசீலித்துத் தன் தவறான புரிதலை புரிந்து கொள்கிறான்.
படிப்பில் குறைத்து படித்தே இருந்தாலும் வாழ்வதற்கான புரிதலை அதிகம் தெரிந்து வைத்திருக்கும் சுமித்ரா கணவன் விட்டு சென்ற பின்பும் அவன் வரும் நாட்கள் தொலைவில் இல்லை என்பதைத் தான் வாழ்ந்த வாழ்வை கொண்டு எடைபோட்டு காத்திருந்தவளுக்கு வெற்றியே கிட்டுகிறது.