சுகாவின் பிறந்த மண் பற்றிய துல்லியமான பதிவுகளும், வசீகரமான வட்டார வழக்குப் பிரயோகமும், நமட்டு ஹாஸ்ய உணர்வும், படித்து முடித்த பின்பும் என் மனசை விட்டகலாத இனிய விஷயங்கள். இந்தக் கட்டுரைகள் மூலம் தெரியவந்த சுகாவின் இசைஞானம் எனக்கு இன்ப அதிர்ச்சி. என்னோடு இருந்த 8 வருடங்களில் எனக்குத் தெரியாமல் போன விஷயம் அது. - பாலுமகேந்திரா
இந்தப் பாவிக்கு, படிக்க வைக்கிறபோது ஆனா ஆவன்னாவில் இருந்து சொல்லித் தராமல், அக்கன்னாவில் இருந்து ஆரம்பித்திருப்பார்களோ என்னவோ, நிறையக் கட்டுரைகளின் கடைசி வரி அவ்வளவு வாக்காக அமைந்து, அதற்கு முந்திய அத்தனை வரிகளையும் உயரத்திற்குக் கொண்டுபோய் விடுகிறது. சாணை பிடித்தது மாதிரி இப்படிக் கடைசி வரியை எழுதத் தெரிந்தவருக்கு, அதற்கு முந்திய வரிகளை எழுதத் தெரியாமலா போகும்? - வண்ணதாசன்
திருநெல்வேலி வட்டார வழக்கு அவ்வளவு பரிச்சயம் இல்லாத பொழுதும் வெகு நெருக்கமாக என்னுடைய பால்ய பருவத்தில் பள்ளி விதிமுறைகளில் கிராமத்தில் பாட்டியின் வீட்டில் கழித்த gnabagangalai பல கதைகள் நினைவூட்டுபவையாக இருந்தன. அது ஒன்றே இந்த புத்தகத்தை நான் நேசிக்க போதுமானதாக இருந்தது.
உதாரணமாக ஆய்புவன் என்னும் கதை. அன்றைய நாட்களில் கிராமங்களில் எதோ ஒருவர் அல்லது இருவர் வீட்டிலோதான் டிவி இருக்கும். எல்லாரும் அங்கே போய் ஒளியும் ஒளியும் , கிருஷ்ணா, மகாபாரதம், ஞாயிறுகளில் தமிழ் படம் வருமா என்ற ஏக்கம் இவை அனைத்தையும் நினைவு கூர வைக்கிறது.
இன்னொரு கதை மனிதர்களுக்கு திரைநட்சதிரங்களின் மேல் உள்ள அதீத அன்பை காட்டுகிறது.
தாயார் சன்னிதி கதை கண் கலங்க வைத்தது.
நகைச்சுவைகள் பஞ்சம் இல்லாத கதைகள்.. வெகு நிச்சயம் படிக்கலாம்..
சில நேரங்களில் ஆழ்ந்தது படிக்கும் வகையாய் முதலில் தோன்றும் எழுத்து, இறுதியில் வெறும் வார்த்தை விளையாட்டாய் சலிப்பூட்டும். இடையில் சில வேகமாய் படித்துக் கடந்து போகும் வகையாய் தோன்றும், ஆனால் சில ஆழங்களைத தொட்டு ஆச்சரியப்படுத்தும். சுகாவின் இந்தப் படைப்பு இரண்டாம் வகை. பால்ய கால ஊரை, அதன் மனிதர்களை, சம்பவங்களை கொண்டு வந்து மனதை வருடிவிட்டு, இறுதி வரிகளில் அசர அடிக்கும் வித்தை கைகூடிய கெட்டிக்காரர். சிரிப்பின் ஊடே மேல்லிய சோகத்தையும், கிண்டலையும் தூவி ரசிக்கவைக்கும் தூரிகைக்காரர். பழைய திருநெல்வேலியைக் காட்டும் விதத்தில், படிப்பவரின் சொந்த ஊரையும், பால்ய காலத்தையும் கொண்டுவந்து மனதில் நிறுத்துவதே இவர் எழுத்தின் வெற்றி.
சில நேரங்களில் ஆழ்ந்தது படிக்கும் வகையாய் முதலில் தோன்றும் எழுத்து, இறுதியில் வெறும் வார்த்தை விளையாட்டாய் சலிப்பூட்டும். இடையில் சில வேகமாய் படித்துக் கடந்து போகும் வகையாய் தோன்றும், ஆனால் சில ஆழங்களைத தொட்டு ஆச்சரியப்படுத்தும். சுகாவின் இந்தப் படைப்பு இரண்டாம் வகை. பால்ய கால ஊரை, அதன் மனிதர்களை, சம்பவங்களை கொண்டு வந்து மனதை வருடிவிட்டு, இறுதி வரிகளில் அசர அடிக்கும் வித்தை கைகூடிய கெட்டிக்காரர். சிரிப்பின் ஊடே மேல்லிய சோகத்தையும், கிண்டலையும் தூவி ரசிக்கவைக்கும் தூரிகைக்காரர். பழைய திருநெல்வேலியைக் காட்டும் விதத்தில், படிப்பவரின் சொந்த ஊரையும், பால்ய காலத்தையும் கொண்டுவந்து மனதில் நிறுத்துவதே இவர் எழுத்தின் வெற்றி.
என்னைப் போலவே நகரமும் அல்லாத கிரமமும் அல்லாத ஊரின் மனிதர்களை கண் முன்னே மிக அழகாக கொண்டு வந்து நிருத்தி இருக்கிறார் சுகா. என்னையும் எனது 90 களின் திருவரங்க நாட்களுக்கு கொண்டு சென்று விட்டன.