What do you think?
Rate this book


"திருநெல்வேலியை அடுத்த கள்ளி குளத்தில் அருள் வடிவாகக் காட்சி தரும் அன்னை அதிசய பனி மாதாவிற்கு நடைபெற்ற 8-ம் திருவிழா அன்றுதான் எங்கள் அண்ணாச்சி அவர்கள் பிறந்தார்கள். அதனால் பனிதாசன் என்றே அவர்களுக்குப் பெயர் சூட்டப்பட்டுது. ஆனால் பின்பு ஆசிரியர் ஒருவர் தான் பன்னீர்தாஸ் என்று அழைத்து, அதுவே பின்பு தொடருமாறு அம்மாவும் அப்பெயரையே அழைக்கச் செய்தார்."ஒவ்வொரு அத்தியாயத்தின் தொடக்கத்திலும் இனிய வசந்தனே, அன்பு வசந்தனே, அன்புள்ள வசந்தனுக்கு, அன்புள்ள வசந்தனே என்று கடிதம் எழுதும் வகையில் ஆரம்பித்துள்ளார். வசந்தன் தனது மகன் என்றும், அவருக்கு இவர் ஜப்பானிலிருந்து தனது அனுபவங்களை கடிதமாக எழுதியுள்ளார் என்று எண்ணினேன். அதற்கான உண்மையான காரணம் கடைசி பத்தியை படித்ததும் தெரிந்து கொண்டேன்.