ஒருவர் ஒருநாளில் நடந்துசெல்லும் தொலைவுக்கு ஒன்று என அறநிலைகளை சமணர்கள் இந்தியாவில் அமைத்தார்கள் என்பது வரலாறு. உண்மையில் அவை இருந்தனவா, இன்று எப்படி உள்ளன என அறியும்பொருட்டு ஜெயமோகன் அவர் நண்பர்கள் ஆறுபேருடன் ஒரு காரில் ஒருமாதகாலம் பயணம் செய்தார். ஈரோடு முதல் ராஜஸ்தானின் லொதுர்வா வரை ஆறு மாநிலங்கள் வழியாக. இந்தியாவின் மறக்கப்பட்ட சமணத்தலங்களை தேடித்தேடிச்சென்று பார்த்தார். அந்த அறநிலைகளின் சங்கிலி இன்றும் அப்படியே இருப்பதைக் கண்டறிந்தார். அனேகமாக அத்தனை இடங்களிலும் அவர்கள் சமண அறநிலைகளில் உணவும் உறைவிடமும் பெற்றனர். மிகமிகக்குறைவான செலவில் அப்பயணத்தை நிறைவுசெய்தனர்.
அப்பயணத்தில் ஜெயமோகன் தினமும் பயணக்குறிப்புகளை தன் இணையத்தளத்தில் எழுதினார். பல்லாயிரம் வாசகர்களால் அவை வாசிக்கப்பட்டன. இந்நூல் அக்குறிப்புகளின் தொகுப்பு.
B. Jeyamohan (also credited as Jayamohan) is one of the most influential contemporary, Tamil and Malayalam writer and literary critic from Nagercoil in Kanyakumari District in the south Indian state of Tamil Nadu.
He entered the world of Tamil literature in the 1990s, Jeyamohan has had impacted the Tamil literary landscape as it emerged from the post-modern phase. His best-known and critically acclaimed work is Vishnupuram, a deeply layered fantasy set as a quest through various schools of Indian philosophy and mythology. His other well-known novels include Rubber, Pin Thodarum Nizhalin Kural, Kanyakumari, Kaadu, Pani Manithan, Eazhaam Ulagam, and Kotravai. His writing is heavily influenced by the works of humanitarian thinkers Leo Tolstoy and Mohandas Karamchand Gandhi. Drawing on the strength of his life experiences and extensive travel around India, Jeyamohan is able to re-examine and interpret the essence of India's rich literary and classical traditions. --- தந்தை பெயர் எஸ்.பாகுலேயன் பிள்ளை. தாத்தா பெயர் வயக்கவீட்டு சங்கரப்பிள்ளை. பூர்வீக ஊர் குமரிமாவட்டம் விளவங்கோடு வட்டம், திருவரம்பு. தாத்தா அடிமுறை ஆசான். ஆகவே சங்கு ஆசான் என அழைக்கப்பட்டிருக்கிறார். அப்பாவின் அம்மா பெயர் லட்சுமிக்குட்டி அம்மா. அவரது சொந்த ஊர் குமரிமாவட்டம் விளவங்கோடு வட்டம், திருவட்டாறு. அப்பாவுடன் பிறந்தவர்கள் இருவர். தம்பி எஸ்.சுதர்சனன் நாயர் தமிழக அரசுத்துறையில் வட்டார வளர்ச்சி அலுவலராக இருந்து ஓய்வுபெற்று இப்போது பத்மநாபபுரத்தில் வசிக்கிறார். அப்பாவின் தங்கை சரோஜினி அம்மா திருவட்டாறில் ஆதிகேசவ பெருமாள் ஆலய முகப்பில் உள்ள பாட்டியின் பூர்வீகவீட்டிலேயே வாழ்கிறார்.
அப்பா முதலில் வழங்கல் துறையில் வேலைபார்த்தார். பின் பத்திரப்பதிவுத்துறையில் எழுத்தராக வேலைபார்த்து ஓய்வு பெற்றார். அவரது பணிக்காலத்தில் பெரும்பகுதி அருமனை பத்திரப்பதிவு அலுவலகத்தில் கழிந்தது. 1984ல் தன் அறுபத்தி ஒன்றாம் வயதில் தற்கொலை செய்துகொண்டார்.
அம்மா பி. விசாலாட்சி அம்மா. அவரது அப்பாவின் சொந்த ஊர் நட்டாலம். அவர் பெயர் பரமேஸ்வரன் பிள்ளை. அம்மாவின் அம்மா பெயர் பத்மாவதி அம்மா. அவரது சொந்த ஊர் திருவிதாங்கோடு. நட்டாலம் கோயில் அருகே உள்ள காளி வளாகம் அம்மாவின் குடும்ப வீடு. அம்மாவுக்கு சகோதரர்கள் நால்வர். மூத்த அண்ணா வேலப்பன் நாயர், இரண்டாமவர் கேசவபிள்ளை. மூன்றாம் அண்ணா மாதவன் பிள்ளை. அடுத்து பிரபாகரன் நாயர். கடைசி தம்பி காளிப்பிள்ளை. அம்மாவுக்கு இரு சகோதரிகள். அக்கா தாட்சாயணி அம்மா இப்போது நட்டாலம் குடும்ப வீட்டில் வசிக்கிறார். இன்னொரு அக்கா மீனாட்சியம்மா கேரள மாநிலம் ஆரியநாட்டில் மணமாகிச்சென்று அங்கெ வாழ்ந்து இறந்தார். அம்மா 1984ல் தன் ஐம்பத்து நாலாம் வயதில் தற்கொலைசெ
ஜெயமோகன் புத்தகங்களுக்கு விமர்சனம் எழுதுவது மாதிரியான சிக்கல் வேறில்லை.
'அருகர்களின் பாதை' இந்திய சமண வழித்தடங்களை தேடிய பயணம். பயணக்கட்டுரை ஆயிற்றே என்று வாங்கினேன். ஒன்று இரண்டு கட்டுரைகள் அவை எழுதப்படும் போது வாசித்திருந்தாலும் ஒரு புத்தகமாய் வாசிப்பது என்பது அலாதியானதுதான்.
ஆனால் ஜெயமோகன் வெறும் பயண கட்டுரை மட்டும் எழுதுவதில்லை - அதனுடன் அவரது பார்வையிலான வரலாற்றையும் எழுதி செல்கிறார். அதில் எதுவும் தரவு சரி பார்க்க பட்டதா இல்லை அவற்றின் ஆதார நூல்கள் எவை போன்ற எந்த வித தகவலும் கிடையாது. இணையத்தில் கட்டுரையாக வரும்போது இது சரியானதாக இருக்கலாம் - புத்தகமாக வரும் போது - தான் பேசும் வரலாற்றுக்கு - குறிப்பாக இந்திய 'இடது சாரி' வரலாற்று ஆய்வாளர்களை போகிற போக்கில் தவறு என்று சொல்லும் இடங்களில் மட்டுமாவது எங்கிருந்து இந்த வரலாற்று தகவல்களை அவர் பெறுகிறார் என்பதை தெரிவித்து இருக்கலாம்.
அத்தகைய தரவுகள் இல்லாமையால் அவரது எந்த வரலாற்று தகவல்களையும் ஒரு பிடி உப்புடன் எடுத்து கொள்வது நல்லது. எல்லா சமண மத கோயில்களின் இடிபாடுகளுக்கும் அலாவுதீன் கில்ஜியின் படையெடுப்பு காரணியாக இருக்கிறது. சமண கோயிலாக இருந்து இந்து கோயிலாக மாறியிருக்கும் இடங்களிலும் இதே விவரணை. இரு மதங்களுக்கும் இடையே இருந்த உறவின் அகல நீட்சிகளை நோக்காமல் ஒற்றை படையாய் இரண்டும் கிட்டத்தட்ட ஒரே மதங்கள் போன்ற சிந்தனைகள் கொஞ்சம் அலுப்பூட்டுகின்றன. தத்துவங்களில் தமிழின் ஒரு முன்னோடி என்றிருக்கும் போது இந்த மேம்போக்கான போக்கு கொஞ்சம் வியப்படைய வைக்கிறது.
ஒரு பயண கட்டுரையாக இந்த பயணம் வியக்க வைக்கிறது. கிட்டத்தட்ட கர்நாடகாவில் இருந்து ராஜஸ்தான் வரையிலான முக்கியமான சமண கோயில்கள் எல்லாமும் இடம் பெற்றுள்ளது. இந்த பயணம் காரிலும் , சமண தர்மசாலைகளை நம்பியும் மட்டுமே என்பது இன்னுமொரு சிறப்பு. தினமும் கிட்டத்தட்ட 200-300 கிலோமீட்டர்கள் என கிட்டத்தட்ட 8000 கிலோமீட்டர்களுக்கும் மேலான பயணம். அவற்றின் அனுபவங்களே சில புத்தகங்கள் எழுத எதுவாக இருக்கும்.
இவற்றை விரித்து எழுதி இருந்தால் தமிழுக்கு ஒரு அருமையான பயண நூல் மட்டும் இன்றி இந்த கால நாட்களின் இந்த கோயில்களின் நிலை பற்றிய ஒரு அருமையான ஆவணமாக இருந்திருக்கும்.
Finest travel blog by writer Jeyamohan on his trip to visit the Buddhist and Jain temples across India - mainly across Karnataka, Maharashtra, Gujarat, Rajasthan, Madhya Pradesh. It gives travel account, historical account as well as spiritual account of the travel