சென்னையின் நீர்வழித்தடங்களைச் சுருக்கமாகவாவது தெரிந்துகொள்ள வேண்டிய அவசியம் நம் எல்லோருக்கும் ஏற்பட்டிருக்கிறது. அதற்கு முதன்மையான காரணம் நவம்பர் 2015ல் பெய்த பெருமழையும் அதைத் தொடர்ந்து ஏற்பட்ட வெள்ளப்பெருக்கும்தான். துண்டிக்கப்பட்ட தனித் தீவாக சென்னை நகரம் மாறியபோது தவிர்க்க இயலாதபடி, கூவம், அடையாறு, பக்கிங்காம் கால்வாய், செம்பரம்பாக்கம் ஏரி, கொசஸ்தலை ஆறு, செங்குன்றம், பூண்டி போன்ற பெயர்களை ஊடகங்கள் உச்சரிக்கத் தொடங்கின. ஆண்டு தவறாமல் வறண்டு போகும் சென்னைக்கு மழை ஒரு சாபமாக மாறும் என்றோ கனவிலாவது நாம் நினைத்துப் பார்த்திருப்போமா? இருந்தும், இயற்கையையும் அரசியலையும் குறைகூறிய கையோடு இந்நிகழ்வை நாம் கடந்து சென்றுவிட்டோம் எ&
சென்னை என்பது பல ஏரிகளின் தொடர்புடைய கிராமங்களின் நிலம் இதை ஆங்கிலேயர்கள் தன் தேவைக்கு நீர்நிலைகளை ஆக்கிரமித்தாலும் இன்று சென்னைவாசிகள் மழைக்காலத்தில் வெள்ள பாதிப்புகளால் அவதிபடுகின்றனர். இப்புத்தகம் 2015 வெள்ளபெருக்கு தாக்கத்தால் ஆசிரியர் நூலாக வெளியிட்டுருக்கறார், பிறகு சென்னையின் இரண்டு பழமைவாழ்ந்த ஆறுகள் மற்றும் புகழ்பெற்ற கால்வாய் பற்றிய வரலாற்றை சொல்கிறார். சென்னையில் வாழபோகிறவர்கள் அல்லது சென்னைவாசிகளுக்கு கண்டிப்பாக படிக்க வேண்டிய புத்தகம். படித்தபின் சுற்றுசூழலை காக்க ஏன் அனைவரும் பொருப்புடன் இருக்கவேண்டும் என்பதை உணர்வீர்கள்