ஸ்ரீஅருணகிரிநாதர் அருளிய கந்தர் அநுபூதி ( மூலமும் உரையும் ) முருகன் மீது தீராத பக்தி கொண்ட அருணகிரிநாதர் அவர் மீது அருளிச் செய்த பதிகம் கந்தர் அனுபூதி ஆகும். சித்தாந்தக் கருத்துகள் நிறைந்த இந்நூல் 51 விருத்தப்பாக்களால் ஆன சிறந்த பாராயண நூலாகும். திருவண்ணாமலையில் தோன்றிய அருணகிரிநாதர் இளமைக் காலத்தே ஆசு முதல் நாற்கவியும் பாடுதலில் மிக வல்லுநராக இருந்தார். இளம் வயதிலேயே பெற்றோரை இழந்த இவர் தமக்கையின் பொறுப்பில் வளர்ந்தார். உடல் நலம் குன்றிய நிலையில் இருந்த அருணகிரிநாதரிடம் முனிவரொருவர் தோன்றி ‘முருகப்பெருமானைப் நினைந்து வழிபடுக’எனக் கூறினார். முதல் முனிவரின் கூற்றை ஏற்காத இவர் மேலும் பிணியாலும், வறுமையாலும் தீரா துன்பத்தால் ஆட்கொள