வளையாபதி - பெருமழைப் புலவர் திரு பொ வே சோமசுந்தரனார் விளக்கவுரையுடன்
சிந்தாமணி, சிலப்பதிகாரம், மணிமேகலை, வளையாபதி, குண்டலகேசி என்னும் இவ்வைந்து நூல்களையும் ஐம்பெருங்காப்பியம் என்று கூறுவர். இவ்வைம்பெருங் காப்பியங்களுள் ஒன்றாகத் திகழும் வளையாபதி என்னும் நூல் இக்காலத்தே கிடைத்திலது. அஃது இனிக் கிடைக்கலாம் என்னும் நம்பிக்கையும் இல்லை. ஆயினு அதனுடைய செய்யுள் சிலவற்றைப் படைக்காலத்து உரையாசிரியப் பெருமக்கள் த உரைக்கும் மேற்கோளாக எடுத்தாண்டிருக்கின்றனர். எனவே இவ்வாற்றான் அவ்வளையாபதிச் செய்யுள் ஒரு சில நமக்குக் கிடைத்துள்ளன. இன்னும் புறத்திரட் என்னும் நூலைத் தொகுத்த சான்றோர் இவ்வளையாபதிக் காப்பியத்தினின்றும் அறுபத்தாறு செய்யுள்களை அந்நூலின்கட் சேர்த்துள்ளனர். இவ்விருவகையானும் இற்றை நாள் நம் கைக்கெட்டியவை எழுபத்திரண்டு செய்யுள்களேயாம்.
இந்நூல் முழுவதும் கிடைக்கப் பெறாமை தமிழரின் தவக்குறைவே என்பதில் ஐயமில்லை. ஆயினும் இற்றை நாள் கிடைத்துள்ள இச் செய்யுள்களையேனும் பாதுகாத்து நந்தம் வழித் தோன்றல்களுக்கு வழங்குவது நமது கடமையாகும் என்பது கருதியும் இந்நூல் வெளியீட்டின் வாயிலாய் இனிதே நிறைவு செய்கின்றனர்.