நாற்பத்தைந்து ஆண்டுகளாக ஒரு நாவல் வாசிப்பில் அலுப்பை ஏற்படுத்தவில்லை என்று சொல்லக் கேட்பதே அந்நாவலை எழுதியதன் பயனை ஓரளவுக்கு பெற்றதற்கான நிறைவையும் தெம்பையும் ஏற்படுத்துகிறது. - கி.விட்டல்ராவ்
விட்டல்ராவ், எழுத்தாளர், ஒவியர், மற்றும் கட்டுரையாளர். எழுத்தாளர் மட்டுமல்லாமல் சிறந்த ஓவியர் மற்றும் புகைப்படக் கலைஞரும்கூட. எழுத்தாளர் என்ற ஒற்றைச் சொல்லில் அவரை அடையாளப்படுத்துவதும்கூட ஒரு வகையில் அவரைக் குறைத்துக் கூறுவதுதான். அவர் புனைவு எழுத்தாளர் மட்டுமல்ல, ஏராளமான சிறுகதைகள் மற்றும் தமிழின் முக்கியமான மூன்று நாவல்கள் தவிர, தமிழ் திரைப்பட வரலாற்று (விமர்சன) நூல் ஒன்றும் கன்னடத் திரைப்பட வரலாற்று நூல் ஒன்றும் எழுதியவர். இவை தவிர வரலாறும் அவர் ஆர்வம் அதிகம் கொண்டுள்ள ஒரு துறை. அதில் தமிழகத்தின் கோட்டைகள் குறித்து அவர் எழுதி சமீபத்தில் வெளிவந்த தமிழகத்துக் கோட்டைகள் நூல்.