விறுவிறுப்பான நடையில், மிகுந்த நேர்த்தியுடன் ஹிட்லரின் வாழ்க்கையை நமக்கு சொல்கிறார் ஆசிரியர் முகில். வரலாற்று நூலா அல்லது ஒரு காவிய புதினமா என ஐயமுற வைக்கும் அளவுக்கு, தகவல்களையும் உணர்வுகளையும் நன்கு கலந்துச் சொல்லுகிறார்.
இந்த நூலை வாசித்ததன் பின், முகிலின் அனைத்து படைப்புகளையும் தேடிப் படிக்க வேண்டும் என்ற வாசகர் ஆசை தானாகவே பிறக்கிறது. ஹிட்லரின் வாழ்க்கையின் ஒவ்வொரு கட்டங்களும் – அவரது ஏற்றத் தாழ்வுகள், தீர்மானங்கள், பேச்சாற்றல், மற்றும் நாடு மீதான அவரது காதல் – மிக அழகாக, ஆதாரப்பூர்வமாகவும், ஆனால் ஓர் இலக்கியத்தொடரைப் போலவும் விவரிக்கப்படுகிறது.
நாம் வரலாற்றில் எப்போதும் பார்த்துக் கொண்டிருக்கும் ஹிட்லரின் இருண்ட பக்கங்களைக் காட்டிலும் அவர் ஒரு ஓவியர், ஒரு நாட்டுப் பற்றாளன், ஆகச்சிறந்த பேச்சாளராக இருந்த மனிதரின் பல பரிமாணங்களை இது நமக்குப் பிரதிபலிக்கிறது.
அவர் தனது இறுதிக் கணங்களில் தாயின் புகைப்படத்தை கட்டிக்கொண்டு இருந்த சம்பவம், அவர் தன் தாய்மீது கொண்ட அன்பை நன்கு வெளிப்படுத்துகிறது.
ஹிட்லரின் வாழ்க்கையை முழுமையாக, உருக்கமாக அறிந்துகொள்ள ஒரு அரிய வாய்ப்பு இந்த நூல். வாசிப்பவரை சிந்திக்கச் செய்யும், ஒரு புதிய பார்வையைத் தரும் ஆழமான வரலாற்றுப் பயணம் இது.