Charu Nivedita is a postmodern, transgressive Tamil writer, based in Chennai, India. His novel Zero Degree was longlisted for the 2013 edition of the Jan Michalski Prize for Literature. Zero Degree was inducted into the prestigious '50 Writers, 50 Books - The Best of Indian Fiction', published by HarperCollins. Vahni Capildeo places Charu Nivedita on par with Vladimir Nabokov, James Joyce and Jean Genet, in her article in the Caribbean Review of Books. He was selected as one among 'Top Ten Indians of the Decade 2001 - 2010' by The Economic Times. He is inspired by Marquis de Sade and Andal. His columns appear in magazines such as Art Review Asia, The Asian Age and Deccan Chronicle.
சாரு நிவேதிதா அவர்கள் செய்திருக்கும் பணி மகத்தானது. மண்ணில் புதைந்து போன இலக்கிய மாணிக்கங்களை வெளி கொணர்ந்து வாசகர்களுக்கு ஒரு அழகான மாலையாக பரிசளிக்கிறார்.
நவீன மற்றும் பின்நவீனத்துவம் என்னும் களங்களில் எத்தனை எத்தனை மகா எழுத்தாளர்கள் இருந்திருக்கிறார்கள். சார்வாகன், கு அழகிரிசாமி, தி ஜ ரங்கநாதன், திரு வி கல்யாணசுந்தரம், சக்தி கோவிந்தன், ந சிதம்பர சுப்ரமணியன், ஆர் சண்முகசுந்தரம், உ வே சாமிநாத ஐயர், அசோகமித்திரன், ந பிச்சமூர்த்தி, அரு ராமநாதன், ஆ மாதவன், எஸ் சம்பத், எம் வி வெங்கட்ராம், தஞ்சை பிரகாஷ் மற்றும் கா நா சுப்பிரமணியன் - இவர்களின் எழுத்துக்களை பற்றியும் தமிழ் இலக்கியத்தில் இவர்கள் ஆற்றிய பெரும் பங்கு பற்றியும் மிகுந்த சிலாக்கியதுடன் எழுதியிருக்கிறார்.
குறிப்பாக இன்று தமிழ் இலக்கிய உலகம் அதிகம் கொண்டாடாத தஞ்சை பிரகாஷ், ஆ மாதவன், எம் வி வி, எஸ் சம்பத், கா நா சு ஆகியோரின் நாவல்களையும் அவற்றிற்கு பின்னால் இருந்த அவர்களின் ஆச்சர்யதக்க எண்ணபோக்குகளையும் அலசி ஆராய்ந்து உவகை ஒரு பக்கம் ஆற்றாமை ஒரு பக்கம் என சாரு நம்மை நெகிழ வைக்கிறார்.
This book is a 'Gateway' or 'Golden-path" to the 'Modern and Post Modern' Tamil literature which is hidden now like a 'Treasure' unknown due to Society's negligence(to be frank abandonment). The author thus decided to pay tribute to his predecessor of the literature, thereby highlighting glimpses of their greatness and great works in this book. I begun my journey in this Golden-path under his guidance and hope to continue it in future by witnessing the treasure forever. Thank you 'Charu'.
A must read for those who want to get introduced to some of the names in Tamil literature. This book has articles on 1. சார்வாகன் 2. திரு.வி.க. 3. வை. கோவிந்தன் 4. ந.சிதம்பர சுப்ரமணியன் 5. ஆர். ஷண்முகசுந்தரம் 6. உ.வே.சா. 7. அசோகமித்ரன் 8. ந. பிச்சமூர்த்தி 9. அரு. ராமநாதன் 10. ஆ.மாதவன் 11. எஸ்.சம்பத் 12. எம்.வி.வெங்கட்ராமன் 13.தஞ்சை பிரகாஷ் 14. க.நா.சு 15. கு. அழகிரிசாமி
I read charu degam book long before (Dec 2016) and I commented what I felt. Now I read this book and I understood charus view on literature. A very good book for the beginners and it indirectly pushed me to read the degam again.
ஆக சிறந்த ஒரு நூல். கொண்டாடப்பட வேண்டியவர்களை மறந்து/மறுத்து போனதால், அவர்களை இந்த கட்டுரைகள் மூலம் கொண்டாடி தீர்த்திருக்கிறார் சாரு நிவேதிதா. இந்த ஒரு நூல் பல்வேறு நூல்களை தேடுவதற்கான வழி வகுக்கிறது.
தமிழ் இலக்கிய ஆளுமைகளை அறிமுகம் செய்த மகத்தான பணியை சாரு செய்திருக்கிறார், அடுத்த தலைமுறைக்கு வெளிச்சமிட்டு காட்டிய அனைத்தும் ஒளிரும் சூரியன்கள்.. அவர்கள் எழுதிய கதையின் சில பகுதிகளை அப்படியே எழுதியதை தவிர்த்திருக்கலாம் என்று தோன்றியது... 👌
The BEST introduction to Tamil Literature. Charu was ill before starting this column. Still he went ahead and took the pressure of writing this wonderful series Pazhuppu Nira Pakkangal 1, 2, 3. Fingers crossed for Part 4.
தமிழில், புது வாசகன் ஒருவன் நுழைந்தால் அவனை இந்நூல் இலக்கியத்தின் பால் அழைத்துச் சொல்லும் ஒரு அற்புத வழிகாட்டி. இதில் மொத்தம் 16 எழுத்தாளர்களை அறிமுகம் படுத்தியுள்ளார். அதில் பலரின் பெயர்களையும் எழுத்தையும் இந்நூலை வாசிப்பதற்கு முன்பு அறிந்தும் வாசித்து இருந்தாலும் இதில் உள்ள கட்டுரைகளை வாசிக்கும் போது நான் அந்த எழுத்தாளரின் படைப்பை வாசித்த போது உணர்ந்ததை விட இந்த கட்டுரைகளில் இருக்கும் பார்வை வேறொரு பரிமாணத்தை காண்பிக்கிறது. இதுவே அந்நூலை மேலும் மீள்வசிப்பு செய்யத் தூண்டுகிறது.
இதில் உள்ள எழுத்தாளர்களின் பட்டியலில் ஒரு சில எழுத்தாளர்களின் பெயர்களை மட்டுமே அறிந்திருந்த நிலையில் அவரைப் பற்றியும் அவரின் படைப்பை பற்றியும் அதில் உள்ள கலையின் மதிப்பும் என்னை வியப்பில் ஆழ்த்தி அந்த எழுத்தாளரின் நூலை தேடி வாசிக்க வேண்டும் என்று பித்து நிலைக்கு தள்ளியது என்பதில் சந்தேகமே இல்லை. இந்த பித்து நிலையிலே பல இடங்களில் தேடி சில நூல்களை வாங்கினேன், ஏனென்றால் பல எழுத்தாளர்களின் பிரதி அச்சிலே இல்லை. ஓரிரு பிரதிகள் இணையதளத்தில் காண முடிகிறது.
கட்டாயம் அனைவரும் வாசிக்க வேண்டிய நூல். சாருவின் புனைவின் மீது ஒரு பெரிய மதிப்பிருக்கிறது அதுவே அபுனைவின் மீது பற்றிக் கொண்டது. இது முதல் பாகம் தான் இன்னும் இரு பாகங்கள் உள்ளன கண்டிப்பாக இவ்வருடம் முடிவதற்குள் அவ்விரண்டையும் வாசிக்க வேண்டும் என எனக்கு நானே வகுத்துக் கொண்டேன். இல்லையெனில் இதில் கூறப்பட்டுள்ள எழுத்தாளர்களின் ஒரு படைப்பையாவது வாசிக்க வேண்டும் என்ற ஓர் தீர்மானம்.