வரலாறு என்பது நேற்று இறந்தவர்க்கும், இன்று இருப்பவர்க்கும், நாளை பிறப்பவர்க்கும் இடையே நடைமெறும் ஒப்பந்தம்'என்றார் ஆங்கிலேய அறிஞர் எட்மண்ட் பர்க். மன்னர்களின் போர்க்களமும்,அவர்களுடைய வெற்றி தோல்வியும் மட்டுமே வரலாறு அன்று. சாதாரண மனிதர்களின் சமூக வாழ்வை ஆழமாகப் பாதிக்கும் ஒவ்வொரு நிகழ்வும் சரித்திரப் பேரேட்டின் அழியாத ஒரு பக்கமாகி விடுகிறது என்பதுதான் உண்மை.