குழந்தைகள் உலகத்தில் சஞ்சரிப்பதில் கவிஞர் விஷ்ணுபுரம் சரவணனுக்கு தூய ஆத்மார்த்தம் உண்டு. அதுதான் குழந்தைகளைத் தேடி பள்ளிகளுக்குச் சென்று கதைகள் சொல்லி அவர்களை மகிழ்விப்பதற்கும், சிறார் இலக்கியம் படைப்பதற்கும் இடையறாது அவரைத் தூண்டிக் கொண்டிருக்கிறது. இந்த நூல் அவரது அன்பின் சமர்ப்பணம். ஏதோ காற்றில் எந்தப் புதரோ விலகும்போது பட்டென்று நம் கண்ணில் படும் காட்டுப் பூ. அது ஒரு மூலிகை. வலுவான சமூக அக்கறையையும், நேசத்தையும் உயிரியல்பெனக் கொண்ட சரவணன் சிறுகதைகள் இவை
முட்டாள் மனிதனின் கதையைப் படிப்பதே சுவாரசியம் அதிலும் அவன் அரசனாக இருந்தால் அவனின் வழியே சீரிய கருத்துக்கள் குழந்தைகள் மனதில் எழுத்தாளர்களால் ஊடுருவி விடுகிறது.