19ம் நூற்றாண்டின் தலைசிறந்த பிரஞ்சு நாவலாசிரியர்களுள் ஒருவரான பால்சாக் சிறுகதைகள் புனைவதிலும் நிகரற்றவர். தீவிர சமூக உணர்வும்,உளவியல் சார்ந்த நுட்பமான கண்ணோட்டமும் இவரது தனிச்சிறப்புகள். இலக்கியத்திற்காகவே தம்மை அர்ப்பணித்துக் கொண்ட இவரது மேதமை இத்தொகுதியில் உள்ள கதைகளின் முலம் தெளிவாக புலனாகும்.
French writer Honoré de Balzac (born Honoré Balzac), a founder of the realist school of fiction, portrayed the panorama of society in a body of works, known collectively as La comédie humaine.
Honoré de Balzac authored 19th-century novels and plays. After the fall of Napoléon in 1815, his magnum opus, a sequence of almost a hundred novels and plays, entitled, presents life in the years.
Due to keen observation of fine detail and unfiltered representation, European literature regards Balzac. He features renowned multifaceted, even complex, morally ambiguous, full lesser characters. Character well imbues inanimate objects; the city of Paris, a backdrop, takes on many qualities. He influenced many famous authors, including the novelists Marcel Proust, Émile Zola, Charles John Huffam Dickens, Gustave Flaubert, Henry James, and Jack Kerouac as well as important philosophers, such as Friedrich Engels. Many works of Balzac, made into films, continue to inspire.
An enthusiastic reader and independent thinker as a child, Balzac adapted with trouble to the teaching style of his grammar. His willful nature caused trouble throughout his life and frustrated his ambitions to succeed in the world of business. Balzac finished, and people then apprenticed him as a legal clerk, but after wearying of banal routine, he turned his back on law. He attempted a publisher, printer, businessman, critic, and politician before and during his career. He failed in these efforts From his own experience, he reflects life difficulties and includes scenes.
Possibly due to his intense schedule and from health problems, Balzac suffered throughout his life. Financial and personal drama often strained his relationship with his family, and he lost more than one friend over critical reviews. In 1850, he married Ewelina Hańska, his longtime paramour; five months later, he passed away.
பிரெஞ்சு இலக்கியத்தின் 19 ஆம் நூற்றாண்டின் மகத்தான எழுத்து ஆளுமை பால்ஸாக். எஸ் ரா வின் உலக இலக்கிய பேருரை மூலம் தான் இவர் எனக்கு அறிமுகம். தன் வாழ்நாளில் கிட்டத்தட்ட 100 நாவல்கள் எழுதியுள்ளார் என்றால் பெரும் ஆச்சர்யம் தான். ஆனால் அவர் எழுதும் முறையும், உத்தியும் நீங்கள் கேள்விப்பட்டால் இது சாத்தியமே என்று தான் தோன்றும். அந்த கடும் உழைப்பினாலே அவர் உடல் நிலை பாதிக்கப்பட்டு குறைந்த வயதிலேயே அவர் இறந்துவிடுகிறார். இலக்கியத்துக்காகவே பிறந்து, வாழ்ந்து, மறைந்த பால்ஸாக் - இலக்கிய உலகின் நீக்கமறு படைப்பாளிதான் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.
பிரெஞ்சு நாட்டின் ஒரு நகரில் தன் வங்கி ஊழியர்களுக்கும், நண்பர்களுக்கும் ஒரு நிகழ்விற்காக தன் இல்லத்தில் விருந்து கொடுக்கிறார் திருமதி தைலஃபர். உணவு அருந்தி முடித்த பின் அனைவரும் இளைப்பாறும் தருணத்தில் அங்கு இருந்த ஹெர்மன் என்ற ஒருவர் அந்த கூட்டத்திற்கு பொழுது போக்கிற்காக ஒரு கதை சொல்ல தொடங்குகிறார். கதை: பிரெஞ்சு நாட்டின் ராணுவ முகாமிற்கு இரண்டு துணை மருத்துவ மாணவர்கள் பயணம் மேற்கொண்ட பொழுது, ஒரு செந்நிற விடுதியில் தங்கி செல்ல திட்டமிடுகின்றனர். தற்செயலாக அவர்களுக்கு கிடைத்ததோ கடைசி அறை. ஆனால் ஒரு பெரும் செல்வ செழிப்பு மிக்க வியாபாரி ஒருவர் அவர்களுக்கு பின் வந்து அறை வேண்டும் என்று கேட்க, இந்த மாணவர்களுடன் சேர்ந்தே தங்கிக்கொள்ள ஒப்புக்கொள்கிறார். அன்று இரவு அந்த மாணவர்கள், வியாபாரி, அந்த விடுதியின் முதலாளி என அனைவரும் சேர்ந்து மது அருந்துகின்றனர். அப்பொழுது அந்த வியாபாரி தன்னிடம் உள்ள மரப்பெட்டியில் விலைமதிப்பில்லா வைரங்கள் உள்ளதாகவும், அதற்கு மேலே தன்னிடம் ரொக்கமாக பல பிராங்குகள் பணம் உள்ளதாகவும் போதையில் உளறி விடுகிறார். இந்த கதை நகரும் வேலையில் அந்த கூட்டத்தில் இருக்கும் திரு தைலஃபரின் முகத்திலும், அசைவுகளிலும் பதட்டம் பற்றிக்கொள்கிறது. அனைவரும் உறங்கிய பின் ப்ராஸ்பெர் மெக்னோன் என்ற மாணவனுக்கு அந்த வியாபாரியை கொன்றுவிட்டு நாம் ஏன் அந்த செல்வத்தை கொள்ளையடித்து சென்றுவிட கூடாது என்று தோன்றுகிறது. அதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் செய்துவிட்டு இறுதியில் அவன் கழுத்தை நோக்கி கத்தியை உயர்த்தும் தருணம் அவன் மனம் மாரி, தன்னை தானே சபித்துவிட்டு, உறங்கிவிடுகிறான். ஆனால் காலை எழுந்தவுடன் அவன் கைகளிலும், உடைகளிலும் ரத்தக்கரையாக பார்த்து அதிர்ச்சி அடைகிறன். அவன் அருகே அந்த வியாபாரியின் தலை துண்டித்து கிடக்கிறது.அதன் பின் அவன் சிறை செல்கிறான். அந்த கொலையை யார் செய்தது என்பது தான் அந்த கதையின் முடிவு?
அந்த கொலையை ப்ராஸ்பெர் மெக்னோன் தன் மனதளவில் நினைத்தானே ஒழிய அவன் செய்யவில்லை. ஆனால் தனக்கு கொடுக்கப்பட்ட தண்டனையை அவன் எந்த ஒரு தயக்கமுமின்றி ஏற்றுக்கொள்கிறான். அவனுக்கு தெரியும் அந்த கொலையை செய்தது அவன் நண்பன் பிரெட்ரிக் தான் என்று. ஆனால் அவனே தண்டனையை ஒப்புக்கொண்டு தன் தாயை அனாதையாக விட்டுவிட்டு மரணம் அடைகிறான். இந்த கதையை கூறும் ஹெர்மன் அவனுடன் சிறையில் சில நாட்கள் கழித்தவன். அவன் இறந்த பிறகு அவன் தாயாரிடம் அவன் எழுதிய கடிதத்தை கொண்டு சென்றவன். உண்மையான குற்றவாளியை ஆசிரியர் வாசிக்கும் வாசகனே கண்டுபிடிக்கும் படி கதை அமைத்துள்ளார். ஆனால் கதையின் பல இடங்களை கூறாமல் கடந்து விடுகிறார். இதில் அதிசயம் என்னவென்றால் இதனை வாசிக்கும் அனைவரும் அந்த விடுபட்ட இடங்களை ஒரே போல்தான் யூகிப்பார்கள். அதுவே இந்த கதை நடையின் சிறப்பு.
தீய செயல்கள் செய்தால் மட்டுமே நாம் தீயவர்கள் என்றில்லை அந்த தீய எண்ணம் மனதில் தோன்றினாலே அந்த செயலை செய்ததற்கு சமமாகும். அந்த தருணத்தில் நாம் ஒரு தண்டனையில் இருந்து தற்செயலாகாவோ, சாதுர்யமாகவோ தப்பித்ததாக நினைத்துக்கொள்ளலாம். ஆனால் அந்த செயலின் வினை நம்மை நம் வாழ்நாள் முழுக்க ஒரு நிழல் போல தொடர்ந்துக்கொண்டே வரும். என்றாவது ஒரு நாள் அந்த நிழல் நிஜத்தை வெளிச்சம் போட்டு காட்டும். அப்பொழுது நிழலையும் நிஜத்தையும் நேருக்கு நேர் நின்று எதிர்க்க முடியாமல் அந்த நிழலுக்கு நாம் பலியாவதை தவிற வேறு வழியில்லை. தன் செயலின் பலன்களை உடனுக்குடன் ஏற்றுக்கொள்பவனுக்கு மரணம் ஒரு முறைதான், அதுவே அந்த பலன்களில் இருந்து தப்பிக்க நினைப்பவனுக்கு ஒவ்வொரு நாளும் மரணமே.