Jump to ratings and reviews
Rate this book

புதிய காலம்: சில சமகால எழுத்தாளர்கள் [Pudhia Kaalam : sila samakaala ezhuththaalarkal]

Rate this book
எங்கும் எப்போதும் படியுங்கள், உங்கள் இலவச Kindle app இல். என் சமகாலத்தவரும் எனக்குப்பின் எழுதவந்தவர்களுமான எழுத்தாளர்களின் படைப்புகளைப்பற்றிய என் அவதானிப்புகள் இவை. இவர்களின் புனைவுலகைக் கூர்ந்து அவதானிக்கவும் மதிப்பிடவும் முயன்றிருக்கிறேன். அவ்வகையில் நான் நின்றிருக்கும் காலத்துடன் இவர்களுக்கு ஓர் இன்றியமையாத இணைப்பை உருவாக்க முயன்றுள்ளேன் என்று படுகிறது.
புனைவிலக்கியவாதிகளைப்பற்றி விமர்சனங்கள் குறைவாகவே எழும் சூழல் இது. எழுந்தாலும் பெரும்பாலும் அரசியலே பேசப்படுகிறது. அவர்களின் புனைவுலகின் நுட்பங்களும் அழகுகளும் பேசப்படுவதில்லை. அதற்கு பிறிதொரு எழுத்தாளனே வரவேண்டியிருக்கிறது.

Paperback

First published December 1, 2009

4 people are currently reading
26 people want to read

About the author

Jeyamohan

207 books858 followers
B. Jeyamohan (also credited as Jayamohan) is one of the most influential contemporary, Tamil and Malayalam writer and literary critic from Nagercoil in Kanyakumari District in the south Indian state of Tamil Nadu.

He entered the world of Tamil literature in the 1990s, Jeyamohan has had impacted the Tamil literary landscape as it emerged from the post-modern phase. His best-known and critically acclaimed work is Vishnupuram, a deeply layered fantasy set as a quest through various schools of Indian philosophy and mythology. His other well-known novels include Rubber, Pin Thodarum Nizhalin Kural, Kanyakumari, Kaadu, Pani Manithan, Eazhaam Ulagam, and Kotravai. His writing is heavily influenced by the works of humanitarian thinkers Leo Tolstoy and Mohandas Karamchand Gandhi. Drawing on the strength of his life experiences and extensive travel around India, Jeyamohan is able to re-examine and interpret the essence of India's rich literary and classical traditions.
---
தந்தை பெயர் எஸ்.பாகுலேயன் பிள்ளை. தாத்தா பெயர் வயக்கவீட்டு சங்கரப்பிள்ளை. பூர்வீக ஊர் குமரிமாவட்டம் விளவங்கோடு வட்டம், திருவரம்பு. தாத்தா அடிமுறை ஆசான். ஆகவே சங்கு ஆசான் என அழைக்கப்பட்டிருக்கிறார். அப்பாவின் அம்மா பெயர் லட்சுமிக்குட்டி அம்மா. அவரது சொந்த ஊர் குமரிமாவட்டம் விளவங்கோடு வட்டம், திருவட்டாறு. அப்பாவுடன் பிறந்தவர்கள் இருவர். தம்பி எஸ்.சுதர்சனன் நாயர் தமிழக அரசுத்துறையில் வட்டார வளர்ச்சி அலுவலராக இருந்து ஓய்வுபெற்று இப்போது பத்மநாபபுரத்தில் வசிக்கிறார். அப்பாவின் தங்கை சரோஜினி அம்மா திருவட்டாறில் ஆதிகேசவ பெருமாள் ஆலய முகப்பில் உள்ள பாட்டியின் பூர்வீகவீட்டிலேயே வாழ்கிறார்.

அப்பா முதலில் வழங்கல் துறையில் வேலைபார்த்தார். பின் பத்திரப்பதிவுத்துறையில் எழுத்தராக வேலைபார்த்து ஓய்வு பெற்றார். அவரது பணிக்காலத்தில் பெரும்பகுதி அருமனை பத்திரப்பதிவு அலுவலகத்தில் கழிந்தது. 1984ல் தன் அறுபத்தி ஒன்றாம் வயதில் தற்கொலை செய்துகொண்டார்.

அம்மா பி. விசாலாட்சி அம்மா. அவரது அப்பாவின் சொந்த ஊர் நட்டாலம். அவர் பெயர் பரமேஸ்வரன் பிள்ளை. அம்மாவின் அம்மா பெயர் பத்மாவதி அம்மா. அவரது சொந்த ஊர் திருவிதாங்கோடு. நட்டாலம் கோயில் அருகே உள்ள காளி வளாகம் அம்மாவின் குடும்ப வீடு. அம்மாவுக்கு சகோதரர்கள் நால்வர். மூத்த அண்ணா வேலப்பன் நாயர், இரண்டாமவர் கேசவபிள்ளை. மூன்றாம் அண்ணா மாதவன் பிள்ளை. அடுத்து பிரபாகரன் நாயர். கடைசி தம்பி காளிப்பிள்ளை. அம்மாவுக்கு இரு சகோதரிகள். அக்கா தாட்சாயணி அம்மா இப்போது நட்டாலம் குடும்ப வீட்டில் வசிக்கிறார். இன்னொரு அக்கா மீனாட்சியம்மா கேரள மாநிலம் ஆரியநாட்டில் மணமாகிச்சென்று அங்கெ வாழ்ந்து இறந்தார். அம்மா 1984ல் தன் ஐம்பத்து நாலாம் வயதில் தற்கொலைசெ

Ratings & Reviews

What do you think?
Rate this book

Friends & Following

Create a free account to discover what your friends think of this book!

Community Reviews

5 stars
5 (55%)
4 stars
2 (22%)
3 stars
0 (0%)
2 stars
2 (22%)
1 star
0 (0%)
Displaying 1 - 2 of 2 reviews
180 reviews3 followers
July 22, 2019
Critical writing about Tamil authors of recent years. Gives a good idea about the books one should have read
Profile Image for Mo.
78 reviews6 followers
August 24, 2020
ஜெயமோகன் தனது சமகால எழுத்தாளர்களை அறிமுகப்படுத்தி, அவர்களின் நிறைகளையும், எல்லைகளையும் மதிப்பிடும் ஆகச்சிறந்த இலக்கிய அறிமுக நூல். அவர்களின் படைப்புகளைப் பற்றி பேசும் போக்கிலேயே இலக்கிய உத்திகள் (techniques / isms), உலகளாவிய இலக்கிய போக்குகள் (trends), இந்திய அளவில் ஏனைய மொழிகளில் பெரும் எழுத்தாளர்கள், தமிழின் சென்ற தலைமுறை எழுத்தாளர்கள் ஆகியோருடன் இவ்வெழுத்தாளர்கள் இணையும் புள்ளி, வேறுபடும் புள்ளி என எல்லாத் தளங்களிலும் ஜெமோவின் விமர்சனம் பயணிக்கிறது.

எஸ்.ரா மற்றும் யுவன் சந்திரசேகர் ஆகியோரின் ஒன்றுக்கும் மேற்பட்ட படைப்புகள் பற்றிய மதிப்பீடுகளில் தொடங்கி பரவலாக அறியப்பட்ட சு.வெங்கடேன், ஜோ டி குரூஸ், சாரு நிவேதிதா என நீண்டு, அந்தளவு கவனம் பெறாத எம்.கோபாலகிருஷ்ணன், சு.வேணுகோபால், கண்மணி குணசேகரன் ஆகியோரின் படைப்புலகம், படைப்பூக்க பின்புலம் என மிக விரிவாகப் பேசுகின்றன ஒவ்வொரு கட்டுரையும்.

கடைசி அத்தியாயத்தில், நான் சற்றும் எதிர்பாராத விதமாக ஜெமோ தான் செயல்படாத கவிதைத் தளத்தை பற்றி, மனுஷ்யபுத்திரனின் படைப்புலகம் பற்றி விரிவாக எழுதியிருப்பது சுவாரஸ்யமான ஒரு திருப்பம்.

சு.வெங்கடேசனின் காவல் கோட்டத்தை படிப்பது ஒரு பேரனுபவம் என்றால், ஜெமோவின் காவல்கோட்டம் பற்றிய விமர்சனத்தை படிப்பது அலாதியான அனுபவம். நாவலின் முக்கிய உச்சங்களாக அமைந்த பகுதியை அவர் தொகுத்தும் விரித்தும் சொல்லிச் செல்வது, கடலறிந்த கடலோடியுடன் சிறுவன் முதன்முதலாக கப்பலில் பயணிப்பது போன்ற பிரமையை உண்டாக்க வல்லது.

உண்மையில் இந்நூல் தீவிர வாசிப்பைக் கோருவது. வாசிப்பதில் நன்கு பழக்கமுள்ள வாசகனுக்கும், ஒரே அமர்வில் ஒரு முழு கட்டுரையை சிதறாத கவனத்துடன் வாசிப்பது பெரும் சவால். ஏனெனில் உள்ளடக்கம் அத்தனை அடர்த்தியும் செறிவும் உடையது.

வழக்கம் போல் ஜெமோவின் வலதுசாரி அரசியல் நிலைப்பாடுகள், இலக்கிய மதிப்பீட்டில் அனாவசியமாக நுழைந்து துருத்தித் தெரிகின்றன. அதையும் தாண்டி இது ஒரு முக்கியமான நூல் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை.
Displaying 1 - 2 of 2 reviews

Can't find what you're looking for?

Get help and learn more about the design.