கலர் சாராயம்(பீர்,பிராந்தி,....) எல்லாம் குடிப்பவரின் உடல் நலம் மற்றும் குடும்ப நலத்தில் உண்டாக்கும் எதிர் விளைவுகள், மது மீட்பு அமைப்பு பற்றிய தகவல் உடன் குடிநோயாளிகள் இல்லா சமூகம் உருவாக வேண்டும் என்ற நல்ல எண்ணத்தில் எழுதப்பட்டுள்ளது. Google ல மெல்லத் தமிழன் இனி என தேடினாள் இந்து இணையதளத்தில் உள்ள இந்த கட்டுரைகளை படிக்க முடியும்.
கட்டுரை கடலில் நான் கண்ட தூரத்து ஒளிவிளக்கு ,
வடுகப்பட்டியில் ஷீலா என்கிற பெண், “எங்களுக்கு இலவசமெல்லாம் ஒண்ணும் வேண்டாம். பிராந்திக் கடைகளை மூடச் சொல்லுங்க. அதுபோதும்” என்று நொடித்துக்கொள்கிறார். சில்வார்பட்டியில் 80 வயதான மூதாட்டி மூக்கம்மா, “டாஸ்மாக் கடைகளை மூடினா கள்ளச்சாராயம் வரும்னு அமைச்சர் சொல்றாரு. 108 ஆம்புலன்ஸ் நெம்பரு மாதிரி கள்ளச்சாராயத்துக்குத் தகவல் கொடுக்க ஒரு நெம்பரத் தாங்க. எவன் சாராயம் காய்ச்சுறான்னு பார்ப்போம்” என்று ஆச்சர்யப்படுத்துகிறார்.