மூன்று தொகுதிகளாக வெளி வந்திருக்கும் இந்த நூல் "ஐந்தாம் வேதம்" என்று சிறப்பாக அழைக்கப்படும் வியாசபாரதம் பற்றியது. வேத வியாசர் எழுதி இந்த உலக மக்களுக்கு அருளிய மஹாபாரதக் கதைகள் வியாச பாரதம் என்று அழைக்கப்படுகிறது. மஹாபாரதத்தில் அமைந்துள்ளது போன்ற கிளைக்கதைகளும் தர்ம விசாரங்களும் வேறு நூலில் இல்லை என்பது வெள்ளிடை மலை. மனிதன் பின்பற்ற வேண்டிய ஒழுக்கங்களை அற்புதமான கதைகள் மூலம் மஹாபாரதம் வெளிப்படுத்துகின்றது. இப்படிப்பட்ட அற்புதமான வியாசபாரதத்திற்கு ஏற்கனவே சிலர் உரை எழுதி உள்ளார்கள். ஆனால் எளிய தமிழில் இனிய நடையில் உரை எழுதி நமக்கு தந்திருக்கின்றார் நூலாசிரியர் திரு வ.ஜோதி அவர்கள். அனைவரும் வாசித்து பயன் பெற வேண்டிய, பின் பற்ற வேண்டிய அற்புத பொக்கிஷம் இந்நூல். பரிசாக கொடுக்கவும் ஏற்றது.