அன்பை மையமாகக் கொண்டிருப்பதுவரை வாழ்க்கை வலிமை உள்ளதாகவே இருக்கும். அன்பை உயிராகக் கொண்ட உடலில் மட்டுமே உயிர்ப்பு இருக்கும். அன்பற்ற உடல் என்பது வெறும் எலும்புகளைப் பூட்டி, தோலால் இணைத்த பொம்மைக்கு நிகரானது. அன்பின் ஈரமில்லாத வாழ்க்கை பாலை நிலத்துக்குச் சமம். அதில் விதைக்கப்படும் விதைகள் ஒருபோதும் துளிர்ப்பதில்லை. அன்பின் மகத்துவத்தை எடுத்துரைக்கும் வள்ளுவரின் வாய்மொழி இது. இன்றுவரை எழுதப்பட்ட இலக்கியப் படைப்புகளின் வரிகளில் அன்பைக் குறித்த வரிகளே அதிகமாக இருக்கக்கூடும். இதற்கு நேர்எதிராகவே மனிதர்களின் எதார்த்த வாழ்க்கை அமைந்திருப்பது துயரமுரண்.