Shrini Vasan17 reviews3 followersFollowFollowMay 1, 2015இப்போது தான் FreeTamilEbooks.com தளத்தில் இருந்து கக்கன் அவர்கள் பற்றிய நூலைப் படித்தேன்.சென்னையில் ஆலந்தூரில் கக்கன் பாலம் அருகே வசித்திருந்ந போதிலும் அவர் பற்றி அறியாமல் இருந்தேன்.நூலைப்படித்து ஆச்சர்யப்பட்டேன்.அரசியலில் இப்படிக்கூட வாழமுடியுமா என்று வியக்கறேன்.அவர் காலத்தில் வாழாமைக்கு வருத்தமே.விடுதலைப் போராட்டம், ஆலய நுழைவு, நீர்ப் பங்கீடு என பல சமூகப் போராட்டங்கள், சிறை, கசையடி, வறுமை, துரோகம் எனப் பல துன்பங்கள் தாண்டி வந்துள்ளார்.பல அமைச்சர் பதவிகள் வகித்தாலும், எளிமையாகவே வாழ்ந்த ஏழைப் பங்காளர்.இவர் போல நாமும் எளிமை, நேர்மை கொண்டு வாழ்ந்தால் மட்டுமே இந்தியாவிற்கு எல்லா வளமும் நலமும் கிடைக்கும்.இல்லையேல் இல்லை.அனைவரும் படிக்க வேண்டிய நூல்.மின்னூலைப் பதிவிறக்க*http://freetamilebooks.com/ebooks/kakan/