வீண் விவாதங்களால் பாதிக்கப்படுபவர் எவரோ. மற்றவர்களுக்காக என்று செய்யாமல் தனக்காக, .தன்னைச் சார்ந்தவர்கள் நலனை மட்டும் பார்ப்பவர்கள் பிற்காலத்தில் எவரிடமும் தலைகுனிய அவசியம் ஏற்படாது.
பெற்றவர்கள் பார்த்து முடிவு செய்த பிறகு நேரில் பார்க்காமல் போன்,ஸ்கைப்பில் பேசி காதல் வளர்க்கும் ஜோடிகளான ராகவ்- நித்திலாவின் காதல் பெரியவர்களின் சண்டையால் பிளவு ஏற்படுகிறது. காதலியை கைபிடிக்க இந்தியாவிற்கே வேலைக்கு வருகிறான் ராகவ்.
நித்திலாவிற்கே தெரியாமல் அவனின் பெற்றோர் முன்னிலையில் தாலி கட்டி அவளின் அப்பாவின் கோபத்திற்கு ஆளாக,அதனால் கடுப்பானவள் ராகவுடன் இணக்கமாகப் போகாமல் எப்பொழுதும் சண்டையுடன் முறைத்துக் கொண்டே இருக்கிறாள் ஒரே வீட்டில் இருந்து கொண்டு.
கணவனின் வீம்பில் மகள் வாழ்க்கை கெட்டுப் போகக் கூடாது என்று நித்திலாவின் அம்மா கொடுத்த ஐடியா என்று தெரிந்த பின்னும், பெரியவர்கள் சண்டையில் தன் மகளின் மனதை என்ன பாடுபடுத்தி இருக்கோம் என்று அவளின் அப்பா உணர்ந்த பிறகு உறவுக்குள் சுமுகமாகிறது.