மாரிசெல்வாராஜின் கதைகள் மானுடத்தின் மீட்சிக்கானவை. இனிவரும் தலைமுறைக்கு விதைகளின் கனவைக் கையளிக்கும் ஒரு பணியை அவருடைய படைப்புகள் முன்னெடுக்கின்றன. நதியின் கரையில் இசக்கிகளாகவும் மாடன்களாவும் நிற்கும் தங்கள் மூதாதையருக்கு. தன் கதைகளைப் படையலிட்டுத் தணிக்கிறார் மாரி செல்வராஜ்!
- அகரமுதல்வன்
புனைவு என்பது என்ன, தாமிரபரணியின் கருணையும் இரக்கமின்மையும் தானே. அவை இரண்டுக்கும் நடுவில் மிதக்கும் புனைவு நிறம்கொண்ட உடலாக, மாரியின் கதைகள் நம்மை வசீகரிக்கின்றன, பயமுறுத்துகின்றன!