அவளுடைய செல்போன் ரிங்டோனை வெளியிட்டது. எடுத்து அழைப்பது யார் என்று பார்த்தாள். புது எண். ‘யாராயிருக்கும்?’ குரல் கொடுத்தாள். “ஹலோ....” “பேசறது நேத்ராவா?” ஒரு பெண் குரல் பதட்டமாய்க் கேட்டது. “எஸ்.....!” “நேத்ரா! நான் யாரு..... என்னோட பேர் என்ன என்கிற விபரங்கள் எல்லாம் உனக்கு வேண்டாம். நான் இப்போ ஒரு பப்ளிக் டெலிபோன் பூத்திலிருந்து பேசிட்டிருக்கேன். நான் சொல்லப் போகிற விஷயம்தான் முக்கியம்....” “எ.. எ... என்ன.... வி... வி... விஷயம்....?” “உன்னோட காதலர் பிரேம் இப்போ கொச்சியில் இருக்கார். இன்னும் கொஞ்ச நேரத்துல அவரும் மற்ற ஆறு பத்திரிகையாளர்களும் அரபிக்கடலில் இருக்கிற ஒரு தீவுக்கு படகில் பயணப்படப் போறாங்க... உடனே அந்தப் பயணத்தை நீ தடுத்து நிறுத்தணும்.....