Jump to ratings and reviews
Rate this book

கதவு [Kathavu]

Rate this book
Kathavu (Tamil)short stories

168 pages, Paperback

First published January 1, 1965

16 people are currently reading
224 people want to read

About the author

கி. ரா என்று சுருக்கமாக அழைக்கப்படும் கி. ராஜநாராயணன் (Ki. Rajanarayanan) கரிசல் இலக்கியத்தின் தந்தை என்று கருதப்படுபவர். கோவில்பட்டியின் அருகில் உள்ள இடைசெவல் கிராமத்தைச் சேர்ந்தவர். 1958இல் சரஸ்வதி இதழில் இவரது முதல் கதை வெளியானது. இவரின் கதையுலகம் கரிசல் வட்டாரத்து மக்களின் நம்பிக்கைகளையும், ஏமாற்றங்களையும், வாழ்க்கைப்பாடுகளையும் விவரிப்பவை.

கரிசல் வட்டார அகராதி என்று மக்கள் தமிழுக்கு அகராதி உருவாக்கிய முன்னோடி இவரே. சாகித்ய அகாடமி விருது, இலக்கிய சிந்தனை விருது, தமிழக அரசின் விருது, கனடா தமிழ் இலக்கியத் தோட்டத்தின் 2016ம் ஆண்டுக்கான தமிழ் இலக்கியச் சாதனை விருது உள்ளிட்ட தமிழின் முக்கிய இலக்கிய விருதுகள் பெற்றவர். 2016-17 ஆம் ஆண்டுக்கான மனோன்மணியம் சுந்தரனார் விருது கி.ராவிற்கு வழங்கப்பட்டது.

Ki. Rajanarayanan (Ki. Ra for short) was born in Idaiseval village in 1923. He dropped out of school in the seventh standard. He was appointed a professor of folklore at Pondicherry University in the 1980s. He held the title of Director of Folktales in the university's Documentation and Survey Centre. He was a member of the Communist Party of India and went to prison twice for his participation and support in the CPI organised peasant rebellions during 1947–51. In 1998-2002 he was a General council & Advisory board Member of Sahitya Akademi.

Ki. Ra.'s first published short story was Mayamaan (lit. The Magical Deer), which came out in 1958. It was an immediate success. Ki. Ra.'s stories are usually based in Karisal kaadu (scorched, drought stricken land around Kovilpatti ). He centres his stories around Karisal country's people, their lives, beliefs, struggles and folklore. The novels Gopalla Grammam (lit. Gopalla Village) and its sequel Gopallapurathu Makkal (lit. The People of Gopallapuram) are among his most acclaimed; he won the Sahitya Akademi award for the latter in 1991. Gopallapuram novels deals with the stories of people living in a South Indian village before the arrival of the British. It involves the migration of people escaping brutal kingdoms north of Tamil Nadu. As a folklorist, Ki. Ra. spent decades collecting folktales from the Karisal Kaadu and publishing them in popular magazines. In 2007, the Thanjavur based publishing house Annam compiled these folktales into a 944-page book, the Nattuppura Kadhai Kalanjiyam (Collection of Country Tales). As of 2009, he has published around 30 books. A selection of these were translated into English by Pritham K. Chakravarthy and published in 2009 as Where Are You Going, You Monkeys? – Folktales from Tamil Nadu. Ki. Ra. is well known for his candid treatment of sexual topics, and use of the spoken dialect of Tamil language for his stories (rather than its formal written form). In 2003, his short story Kidai was made into a Tamil film titled Oruthi. It was screened in the International Film Festival of India.

Ratings & Reviews

What do you think?
Rate this book

Friends & Following

Create a free account to discover what your friends think of this book!

Community Reviews

5 stars
16 (26%)
4 stars
28 (45%)
3 stars
12 (19%)
2 stars
0 (0%)
1 star
5 (8%)
Displaying 1 - 5 of 5 reviews
Profile Image for Prakash Ravichandran.
6 reviews
January 6, 2026
2026 ஆம் ஆண்டின் முதல் வாசிப்பாக நான் "கி.ரா" என்கிற "கி.ராஜநாராயணன்" அவர்களின் முதல் சிறுகதை தொகுப்பான "கதவு" என்ற புத்தகத்தை வாசிக்கத் தொடங்கினேன். மொத்தம் 15 சிறுகதைகள் உள்ளது புத்தகத்தில். 


புத்தகத்தின் பெயரிலேயே முதல் சிறுகதை "கதவு" தொடங்கியது. இக்கதையைப் படிக்கும் பொழுது எனக்கு நினைவுக்கு வந்தது என்னுடைய பாட்டியின் வீடு தான் இக்கதையில் கூறியது போல் அல்லாமல் ஒரு நடுத்தர அளவுள்ள பெரிய கதவு என் பாட்டி வீட்டின் உள்வாசலில் இருந்தது. வெளி வாசலில் மரச் சட்டங்களால் குறுக்கும் நடுக்கமாக ஓட்டைகளுடன் இருக்கும் வெளிக்கதவு இருந்தது, உள்ள பெரிய கதைவானது சிறுசிறு இரும்பு தகடுகளால் ஒரு மரச்சட்டத்தில் அடிக்கப்பட்ட வாசற்கதவு அது.


நான் என் குழந்தை பருவத்தை அந்த வீட்டில் தான் கழித்தேன் அதன் தாழ்ப்பாளை பிடித்துக் கொண்டு ஒரு காலை மட்டும் அடியில் இருக்கும் சட்டத்தில் ஊன்றி கொண்டு இக்கதையில் குழந்தைகள் விளையாடுவது போல் நானும் விளையாடி இருக்கிறேன். அப்படி விளையாடி என் தாயிடம் பலமுறை அடியும் வாங்கி இருக்கிறேன். 


இதில் லட்சுமி சீனிவாசனிடம் காண்பிக்கும் நாய் படம் அச்சடித்த அட்டையை கதவில் ஒட்டுவது போல் நான் சிறுவயதாக இருக்கும் பொழுது என் சித்தப்பா என்னை தூக்கி என் கையால் "Parle G" பிஸ்கட்டுக்கு இலவசமாக கொடுக்கப்பட்ட 'சக்திமான்' ஸ்டிக்கரை என் கையால் கதவில் ஒட்ட வைத்தார். அந்த ஸ்டிக்கரில் சக்திமான் தன் இடுப்பில் இரண்டு கைகளையும் வைத்துக் கொண்டு கம்பீரமாக நிற்பது போல் இருக்கும் அவரின் கால்களின் கீழே சக்திமான் என்று எழுதி இருக்கும் இவை இரண்டையும் சுற்றி மஞ்சள் நிறத்தில் பளிச்சு என்று ஜொலிப்பது போல் அவுட்லைன் இருக்கும். இதேபோல் ஸ்விட்ச் பாக்ஸில் சக்திமான் வில்லனை அடிப்பது போல் மற்றொரு ஸ்டிக்கர் அவர் மூலமாக நான் ஓட்டினேன். காலங்கள் ஓடியது ஒரு நேரத்தில் அந்த வீட்டில் யாரும் இல்லாமல் பூட்டி கிடந்தது ஆனால் நான் ஒட்டிய சக்திமான் மட்டும் அங்கு சிரித்துக் கொண்டே வாழ்ந்து வந்தார். தற்போது அந்த வீடும் கதவும் முழுமையாக எடுக்கப்பட்டு காலி இடமாக கிடைக்கிறது.

இக்கதை படித்த பிறகு நான் தற்போது அந்த பக்கம் சென்றபோது என் கண்களுக்கு அந்த கதவும் சக்திமானும் இன்னும் சிரித்துக் கொண்டே இருப்பது போல் தெரிந்தது. 


அடுத்த கதை "குடும்பத்தில் ஒரு நபர்". அயிரக்கா வளர்த்து வந்த மாட்டைப் பற்றிய கதை இக்கதையில் மாட்டைக் காப்பாற்ற வேண்டும் எண்ணம் அனைவருக்கும் இருந்தாலும் என்ன செய்ய வேண்டும் என்ற யோசனை யாரிடமும் இல்லை மூடநம்பிக்கைகள் கை வைத்தியம் என அனைத்தையும் உதறிவிட்டு கால்நடை மருத்துவரின் முதலிலேயே அணுகி இருந்தால் அந்த மாடு காப்பாற்றப்பட்டு இருக்கும் தொட்டணக் கவுண்டரும் ஏர் இழுத்து இருக்க வேண்டிய அவசியமில்லை இல்லாமல் போய் இருக்கும். 


"சினேகம்" இப்புத்தகத்தின் 12 ஆவது கதை ராமி மற்றும் ராஜா இருவருக்கும் இடையே இருந்த நட்பை பற்றிய கதை. 

சிறுவர்களாக இருக்கும்பொழுது ஓடி ஆடி ஒன்றாய் தெரிந்தவர்கள் ஒரு காலத்திற்குப் பிறகு ஒருவரை ஒருவர் விட்டு ஏதோ ஒரு காரணத்திற்காக வேறு ஒரு இடத்திற்கு சென்ற பிறகு மீண்டும் எங்கோ ஏதாவது ஒரு விழாவிலோ அல்லது பொதுவெளியில் சந்திக்கும் பொழுது சாதாரணமாக கடந்து சென்று விடுகிறோம் அல்லது சொற்ப வார்த்தைகளை மட்டும் ஏதோ முன்பின் தெரியாதவர் போல் பேசிவிட்டு கடந்து சென்று விடுகிறோம். இது ஏன் என்ற கேள்வி அனைவரும் மனதில் எழக்கூடிய ஒன்றுதான் காலப்போக்கில் அதுவும் கடந்து விடுகிறது. ஆனால் நம் மனதில் அந்த நட்பு மட்டும் ஆழமாக இருந்து கொண்டே இருக்கிறது. 


அடுத்து 14 வது கதையான "மனிதம்" ஆல் அரவமில்லாத ஒரு கிராமத்தை சாலையில் தன் குடும்பத்துடன் காரில் செல்லும் பொழுது கார் ரிப்பேர் ஆகி நடுரோட்டில் நிற்கிறது. டிரைவர் இறங்கி காரை சரி பார்த்துக் கொண்டிருந்தார் காரில் வந்தவருக்கோ ஒரே பயம் கூடவே காரின் மீது கோபம் பொத்துக் கொண்டு வந்தது. 

அப்போது கையில் லைட்டுடன் முட்டை கண்களோடு வந்தவர்தான் 'ராமயங்கார்' காரைப் பற்றி விசாரித்து விட்டு காரில் வந்தவர்களை தன் வீட்டிற்கு அழைத்தார். அவர்களும் இவர் யார் என தெரியாமல் குழப்பத்துடன் சிறு பயத்துடனும் அவரின் வீட்டிற்கு சென்றார்கள். ராமயங்கார் அந்த ஊரின் ஒதுக்குப்புறத்தில் ஒரு சிறிய காபி கடையை நடத்தி வருகிறார். காரில் வந்தவரின் மனைவியின் உடல் முழுக்க நகை போட்டு இருந்தால் அவள் அவரின் வீட்டிற்குள் செல்லாமல் வெளியே போடப்பட்டிருந்த பெஞ்சில் அமர்ந்து விட்டால் பின் ராமய்யங்காரின் அம்மா வந்து கூப்பிட்டபின் தான் உள்ளே சென்றாள் ஏனென்றால் அவளுக்கு அவரின் மகளை பார்த்த பொழுதே பொறாமை பெற்றுக் கொண்டது ஏனென்றால் அந்த சிரிப்பு இல்லை மிக அழகாக இருந்தால், ராமய்காரின் மனைவி எவ்வளவு அழகாக இருப்பாள் என்ற எண்ணமும் கூடவே தோன்றியது அவளுக்கு அவள் நினைத்தது போலவே அவர்களும் அழகாக தான் இருந்தார்கள் இவளுக்கு அது மேலும் வெறுப்பை ஏற்றியது. 

பின் சிறுவனுக்கு திருச்சிற்றம்படியும் காப்பியும் ராமய்யங்கார் கொடுத்தார் அதற்கு பணம் கொடுக்க காரணம் வந்தவர் எடுத்தபோது அவர் தடுத்துவிட்டார். இவரின் பரந்த மனதை பார்த்து பூரிப்படைந்தார் பின் ஆவலுடன் சில கதைகள் பேசிக் கொண்டிருந்தனர் கடையைப் பற்றியும் வியாபாரத்தை பற்றியும் கேட்டுக் கொண்டிருந்தார் காரில் வந்தவர். பின் கார் டிரைவர் வந்து கார் சரியாகி விட்டது என்று கூறினால் காரில் வந்தவர்கள் ராமயங்கார் மற்றும் அவர்களின் குடும்பத்தினரிடம் அவர்கள் விடைபெற்றுச் சென்றார்கள். 

பின் மூன்று நாட்களுக்கு பிறகு வேலையை முடிந்ததும் திரும்பி வரும் வழியில் ராமயங்காரின் குடும்பத்தை பார்த்திபட்டி செல்லலாம் என நினைத்து வந்தவர்களுக்கு பேரதிர்ச்சி காத்திருந்தது. ஏனென்றால் ராமயங்காரின் வீடானது முழுவதும் எரிந்து சாம்பலாகிப் போயிருந்தது. இதைக் கண்ட அப்பா மகன் இருவரும் மிகுந்த மன வேதனை அடைந்தார்கள் அருகில் இருந்த கிராமத்து நபர்களிடம் இதைப் பற்றி விசாரித்தார்கள் அவர்கள் நடந்த கதையை விவரமாக கூறினார்கள் அந்த சம்பவத்தை கேட்டதின் மேலும் துயரம் அடைந்தார்கள் பெண் அங்கிருந்து கிளம்பினார்கள். 

ஆனால் அவரின் மனைவிக்கோ அவ்வாறு இல்லை அவள் அந்த எரிந்த வீட்டை பார்த்து சிரித்துக் கொண்டே சென்றாள். 

இதுபோல் தான் மனிதர்களுக்குள்ளும் சில தேவையில்லாத காரணங்களுக்காகவும் பொறாமையின் காரணமாகவும் அடுத்தவரின் மேல் வன்மத்தை வைத்துக் கொள்கிறார்கள் ராமயங்கரை போல் அனைவரின் மீதும் அன்பு செய்ய வேண்டும் மற்றும் அனைவருக்கும் உதவி செய்ய வேண்டும்.


பிரகாஷ் ரவிச்சந்திரன்

கடலூர்
This entire review has been hidden because of spoilers.
Profile Image for Yadhu Nandhan.
260 reviews
February 8, 2022
1960களில் எழுதப்பட்ட சிறுகதைகள் கொண்ட தொகுப்பு ஆகும் இந்தப் புத்தகம். மாயமான் பலாப்பழம் ஆகிய இரண்டு கதைகள் இந்த தொகுப்பில் சிறந்தவை என்று கருதுகிறேன்.
2 reviews
Want to read
August 15, 2022
heard from associates that this is a book of very readable short stories including kadhavu-
Profile Image for Srigan Pranav.
5 reviews
February 9, 2024
I only read the kathavu short story which was pretty good tbh. Just a page was enough to show the entire feelings of the characters!
Displaying 1 - 5 of 5 reviews

Can't find what you're looking for?

Get help and learn more about the design.