மனவெளியின் சஞ்சலனங்களை கவிதைகள் வாயிலாக இளைபாறுவதில் ஆழ்ந்த பெருமூச்சு விடுகின்றேன். கறந்து எடுக்கப்பட்ட பால்துளிகளில் பசுவின் மார்பு சூடு இருப்பது போல் இக்கவிதை தொகுப்பு முழுவதும் என்னில் நின்று நான் கண்டுக் கொண்ட மனிதர்களின் வாழ்க்கை சூடு இருப்பதை காணுவதில் பேரமைதி கொள்கின்றேன். ஒவ்வொரு பரிணாமத்திலும் காலகட்டங்கள் நம்மை நீர்சுழி போல் புதுவித வட்டத்திற்குள் தள்ளிவிடும். அவ்வட்டத்திற்குள் அடைபடும் பாமர மனிதர்களின் ஓசை என்பது வெள்ளப்பெருக்கின் போது நதியில் வரும் புது வெள்ளத்தின் ஓசையை ஒத்து காணப்படும். அவ்வித ஓசைக்குள் கவிதை எழுவதில் மனவெளியின் தனிமைகள் எனக்கு கை கொடுத்துள்ளன. இக்கவிதை தொகுப்பு முழுவதும் எளிய மனிதர்களின் வாழ்வ
சஜு (பிறப்பு: பெப்ரவரி 22, 1998) நாட்டாரியல் ஆய்வாளர், கவிஞர். தமிழ்நாட்டில் குமரி மாவட்டம் மணவாளகுறிச்சி பகுதியில் நாட்டார் தெய்வம், கலைகள் சார்ந்த ஆய்வுகள் நிகழ்த்தி வருகிறார். நாட்டுப்புறத் தாளவாத்தியக் கலைஞராகவும் செயல்பட்டுவருகிறார்.
விருதுகள் 2025 ஆம் ஆண்டில் ரமேஷ் பிரேதன் நினைவாக வழங்கப்பட்ட விஷ்ணுபுரம் இலக்கிய வட்டம் விருது