பெயர் சிங்கமுத்து! சிம்ம ராசி, சிம்ம லக்னத்தில் பிறந்தவர்! அதனால் அவரை குடும்பமே சிங்கம் என்று தான் சொல்லும்! அவர் சிங்கமா? இல்லை அசிங்கமா என கதையை படிக்க படிக்க உங்களுக்கே புரியும்! வெறும் வீராப்பு, வெட்டி பந்தா, சவடால், அலட்டல், அகங்காரம், இவைகளின் மொத்த வடிவம் சிங்கமுத்து! பெரிய படிப்பா என்று நீங்கள் கேட்டால் எஸ்ஸெல்சி பெயில்! அதுவும் மார்ச் செப்டம்பர் என நாலு முறை எழுதி நாலிலும் வெற்றிகரமாக தோற்றவர்! அதற்கும் அலட்டலாக சில காரணங்கள்! வீட்டில் இவர் மூத்த பிள்ளை! அப்பாவை சிறு வயதில் இவரது ஜாதகம் தான் முழுங்கியது என்று பல பேர் சொன்னதுண்டு! விதவை தாயார்! ஒரு தம்பி, அவன் புத்திசாலி! நன்றாக படிப்பவன்! அதனால் ஒரு செலவு இல்லாமல் ஸ்காலர்ஷிப்பில் கல்லூரி பட&