உலகப்புகழ்பெற்ற முப்பது அரிய நூல்களைப் பற்றிய கட்டுரைகளின் தொகுப்பு இது. வாசிப்பில் விருப்பமான புத்தகங்கள் குறித்து எஸ்.ராமகிருஷ்ணன் இணையத்திலும் இலக்கிய இதழ்களிலும் எழுதிய இக்கட்டுரைகள் தமிழ் வாசகனுக்கு உலக இலக்கியத்தின் வாசலைத் திறந்து விடுகின்றன
S. Ramakrishnan (Tamil: எஸ்.ராமகிருஷ்ணன்; born 1966)
is a noted Tamil author and Tamil film dialogue writer. He was born in Mallankinaru, Virudhunagar district, Tamil Nadu.
Ramakrishnan is noted for his column Thunai Ezhuthu in the magazine Ananda Vikatan. His short stories have been translated in German, French, Kannada, Hindi and Malayalam.
His other works include Kadhaa Vilaasam, Desaandri, and Alainthen Tirindhen.
எஸ். ராமகிருஷ்ணன் அவர்கள் இணையத்திலும் இலக்கிய இதழ்களிலும் உலகப்புகழ் பெற்ற 30 அரிய நூல்கள் பற்றி எழுதிய கட்டுரைகளின் தொகுப்பு இது.
இப்புத்தகத்தில் குறிப்பிடப்படும் சில நூல்கள்\நாவல்கள்:
Third Class Ticket by Heath Wood, வாரிச்சூடினும் பார்பவரில்லை, White Man Falling by Mike Stock, Small is Beautiful, ஒரு வாழ்க்கையின் துகள்கள், The Diary of Anne Frank, Grandfather, When Elephant Weeps by Jeffery Mussaief, Basho and The Fox, The Inheritance of Loss, The Little Prince, Mirrors. Stories of almost everyone, Sophie's World, What I Talk About When I Talk About Running, Kafka on the shore, தேவமலர், The Wind Up Bird Chronicles, & The Birds of Shakespeare
உலகப் புகழ்பெற்ற 30 அரிய நூல்களைப் பற்றிய கட்டுரைகளின் தொகுப்பு தான் ரயிலேறிய கிராமம் என்னும் இந்நூல்.
புத்தகத்தின் பெயரை பார்த்தவுடன் ஒரு ஆர்வத்தில் வாங்கிய நூல்தான் இது படித்த பின்பு தான் தெரிகிறது Heather wood ன் Third class ticket என்னும் நூலை பற்றிய அறிமுக கட்டுரைதான் ரயில் ஏறிய கிராமம் என்னும் நூல். அதுவே புத்தகத்தின் தலைப்பாக அமைந்துள்ளது.
1969 ஆம் ஆண்டு கல்கத்தாவில் உள்ள ரயில்வே துறையின் உயர் அலுவலகம் ஒன்றிற்கு வந்த ஸ்ரீமதி சென் என்ற வயதான பெண் தான் இன்னும் இரண்டு மாதங்கள் நோயிலிருந்து இறந்துபோக இருப்பதாகவும் அதற்குள் தன்னுடைய கிராமத்தை சேர்ந்த மக்கள் உலக அனுபவத்தை பெற வேண்டும் என்பதற்காக தனது சொத்து முழுவதையும் செலவு செய்து அவர்களை ஒட்டுமொத இந்தியாவையும் ஒரு முறை சுற்றி பார்த்து வர செய்ய விரும்புவதாக கூறினார் . அதன்படியே அந்த கிராமவாசிகள் 40 பேர் முதன்முதலாக கிராமத்தை விட்டு வெளியேறி இந்தியா முழுவதையும் சுற்றிப் பார்க்க செல்கிறார்கள் அதைப்பற்றிய கதைதான் ரயில் ஏறிய கிராமம் என்னும் இந்த நூல். இதுபோல பல சுவாரசியமான வாழ்வில் அனைவரும் வாசிக்க வேண்டிய முக்கியமான நூல்களை பற்றிய அறிமுகத்தை எஸ் ராமகிருஷ்ணன் அவர்கள் ஒரு கட்டுரையாக தொகுத்து இந்நூலில் வழங்கியுள்ளார்.
நூலாசிரியர் எஸ் ராமகிருஷ்ணனை பற்றி பேச வேண்டும் என்றால் அவரின் இரண்டு புத்தகங்களை தான் நான் வாசித்து உள்ளேன் ஆனால் youtube ல் உள்ள அவரது பல சொற்பொழிவுகளை நான் கேட்டுள்ளேன் . அவரது எழுத்து வடிவமும் சரி அவர் உபயோகிக்கும் வார்த்தைகளும் சரி அவர் வாழ்வை பார்க்கும் ஒரு கோணமும் பார்வையும் வாழ்வின் மீதும் மனிதர்கள் மீதும் ஒரு ஆசையும் நம்பிக்கையும் உருவாக்கி ஒரு புத்துணர்வை ஏற்படுத்தும்.
அவரது சொற்பொழிவை கேட்ட பலருக்கு தெரியும் அவர் இந்தியா முழுவதும் பயணித்துள்ளார் ...தான் பார்த்த காட்சிகளையும் சந்தித்த மனிதர்களைப் பற்றியும் அழகாக பார்வையாளர்களுக்கு விவரிப்பார்... அவர் அடிக்கடி சொல்லும் ஒன்று இந்தியாவினை முழுமையாக காண்பதற்கு ஒருவனுக்கு அவனது வாழ்நாள் போதாது இந்தியாவில் வாழ்பவர்கள் ஒருமுறையாவது அத்தனை முக்கிய நதிகளையும் கண்டு விட வேண்டும் நதி வழி தான் நகரங்களும் இருக்கின்றன ஆகவே நதிகளையும் நகரங்களையும் நினைத்தே பயணம் மேற்கொள்ளலாம்.
இந்த புத்தகத்தில் கூறியுள்ள நூல்களைப் பற்றிய அறிமுகத்தை படிக்கும் பொழுதே அந்த நூல்களை வாசித்து விட வேண்டும் என்ற ஆர்வம் ஏற்படும் .நான் எஸ். ராமகிருஷ்ணன் அவர்களின் சொற்பொழிவை பார்த்து தான் பல நூல்களை தேடி தேடி வாசித்துள்ளேன் அவர் கூறும் அத்தனை நூல்களையும் குறித்துக்கொண்டு அதை வாங்கி நான் வாசித்து அவர் பெற்ற அதே அனுபவத்தை நானும் பெற்றுள்ளேன். குறிப்பாக இலக்கற்ற பயணி என்னும் நூலில் அவள் நயாகரா நதியை முதன்முதலில் நேரில் பார்த்த போது தனக்கு ஏற்பட்ட அனுபவத்தை எழுதியிருப்பார் நான் இதுவரை என் வாழ்வில் நயாகராவை பார்த்ததில்லை ஆனால் அந்த புத்தகத்தை நான் படிக்கும் போது அந்த நயாகரா நீர்வீழ்ச்சியின் சாரல் என் மீது படுவது போன்ற உணர்வு என் மீது கிடைத்தது அதுதானே ஒரு எழுத்தாளனுக்கு கிடைக்கும் வெற்றி..தனக்கு கிட்டிய அனுபவத்தை தனது வாசகர்களுக்கும் கிடைக்கபெற எழுதுவது. அதனாலேயே எஸ். ராமகிருஷ்ணன் என்ற பெயரிட்ட நூலை பார்த்தாலே கண்மூடி கொண்டு வாங்கிக் கொண்டு வந்து விடுவேன் அது போல வாங்கியதுதான் இந்த நூலும்.
ரயிலேறிய கிராமம் - எஸ்.ராமகிருஷ்ணன் பதிப்பகம் : தேசாந்திரி பக்கங்கள் : 152
A casual read, a good selection of rare books, especially Rayileriya gramam kavithai ketta nari ariaha padatha theevu tholaihkatchi pinnal shakespeare Paraviahkal Keeingge Vanathirudan Exclusive collections and I continuously read his book, there is a only flaw in his writing was too much of reference when he emphasis any point. May be he might think that his idea was not his perception but universal otherwise he is one of the best stroyteller..