சந்திரபாபு நாயுடு. ஆந்திர அரசியலின் தவிர்க்கமுடியாத தலைவர். என்.டி.ராமாராவின் மருமகன். ஆனால் அவருக்கு முன்பே அரசியல் களத்துக்கு வந்து வெற்றிகளைக் குவித்தவர். என்.டி.ஆர் என்ற ஆகப்பெரிய அரசியல் தலைவரையே கட்சியை விட்டு நீக்கி, முதலமைச்சர் நாற்காலியை அவரிடமிருந்தே பறித்து அதிர்வுகளைக் கிளப்பியவர். மூன்று முறை ஆந்திராவின் முதலமைச்சர் பதவியை வகித்தவர். படுமோசமான கொலை முயற்சிகளுக்கு உள்ளானவர். ஆந்திர மாநிலத்தைத் தகவல் தொழில்நுட்ப மாநிலமாக உருமாற்றியவர். ஆந்திர அரசியலில் மட்டுமின்றி அகில இந்திய அரசியலிலும் சந்திரபாபு நாயுடுவின் பங்களிப்பு காத்திரமானது.
பிறந்தது மயிலாடுதுறையில். படித்தது முதுகலை கணிப்பொறிப் பயன்பாடுகள் (M.C.A) கல்கி பத்திரிகையில் சுதந்தரப் பத்திரிகையாளராக எழுதத் தொடங்கி தற்போது கிழக்கு பதிப்பகத்தில் முதன்மைத் துணை ஆசிரியராகப் பணிபுரிகிறார். இந்தியாவில் நிகழும் அரசியல் பிரச்னைகள் குறித்த இவருடைய கட்டுரைகள் குமுதம் ரிப்போர்ட்டர் இதழில் தொடர்ந்து வெளியாகிக் கொண்டிருக்கின்றன. தேசிய அரசியல் மீது தீவிரக் கவனம் செலுத்திவரும் இவருக்கு தமிழக அரசியல் மீது எப்போதும் கவனம் உண்டு. தி.மு.க, அ.தி.மு.க, பா.ம.க ஆகிய கட்சிகள் தோன்றி வளர்ந்த கதையைப் புத்தககமாகப் பதிவு செய்திருக்கும் இவர் நியூ ஹொரைஸன் மீடியாவின் இன்னொரு பதிப்பான MiniMaxன் பொறுப்பாசிரியராக இயங்கிவருகிறார்.