பதினைந்து வயதில் கணக்கு வாத்தியாருக்கு காதல் கடிதம் கொடுத்து அடி வாங்கிய காவேரி, அதே கணக்கு வாத்தியாரான தமிழ்மாறனை திருமணம் செய்யும் நிலைக்கு பிற்காலத்தில் தள்ளப்படுகின்றாள்.அவர்களின் மெல்லிய காதல் கதை.கதையில் இருந்து ஒரு டீசர்.அன்று மதியம் பாடசாலை விட்டு வந்த காவேரியோ குளித்து விட்டு சாப்பிட அமர்ந்த சமயம், அவள் அருகே வந்து அமர்ந்தார் காமாட்சி... "இன்னைக்கு என்ன பண்ணுனீங்க?" என்று கேட்டுக் கொண்டே அவள் சாப்பிட, "தரகர் வந்து மாப்பிள்ளையோட ஃபோட்டோ கொடுத்துட்டு போனார்... முதல் முறை உன் ஜாதகத்துக்கு இப்படி ஒரு ஜாதகம் நல்லாவே பொருந்தி இருக்கு. மாப்பிளைக்கு அப்பா இல்லை. அம்மா மட்டும் தான். தங்கச்சியை கல்யாணம் பண்ணி கொடுத்துட்டாங்க.